Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ 2034-ல் அமல்படுத்த திட்டம்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
    தேசியம்

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ 2034-ல் அமல்படுத்த திட்டம்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவர் அறிவிப்பால் சர்ச்சை

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ 2034-ல் அமல்படுத்த திட்டம்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: 2034-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டமாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவதாகும். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பதே இந்தத் திட்டமாகும். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா, மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

    பி.பி.சவுத்ரி கூறும்போது, “வரும் 2034-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துகளைக் கேட்க முடிவு செய்துள்ளோம்.

    2027-ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல்கள் குறுகிய கால ஏற்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக 2032-ல் ஒரு மாநிலத்துக்கோ, யூனியன் பிரதேசத்துக்கோ சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால் அந்தப் பேரவை 2 ஆண்டுகள் மட்டும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் வரும் 2034-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது” என்றார்.

    இந்நிலையில் பி.பி. சவுத்ரியின் பேச்சு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினர் சென்று ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா

    September 16, 2025
    தேசியம்

    வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    September 16, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: விசாரணை அக்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    September 16, 2025
    தேசியம்

    16-வது முப்படை தளபதிகள் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கினார் பிரதமர் 

    September 16, 2025
    தேசியம்

    வன்முறையில் ஈடுபட்ட 5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் மாநில அரசு முடிவு

    September 16, 2025
    தேசியம்

    ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா
    • வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகம்!
    • மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம்: துரை வைகோ உறுதி
    • உங்கள் படுக்கை அட்டவணையில் தண்ணீரை வைத்திருப்பதற்கான இந்த பொதுவான பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.