Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாக். பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது’ – கனிமொழி எம்.பி. பேச்சு
    தேசியம்

    ‘ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாக். பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது’ – கனிமொழி எம்.பி. பேச்சு

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாக். பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது’ – கனிமொழி எம்.பி. பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாட்ரிட்: பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

    ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

    இதனையடுத்து பாகிஸ்தானுடனான மோதல்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கலான தன்மையை திமுக எம்.பி கனிமொழி பேசினார். அவர், “இந்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் பேசுவதன் மூலமும், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து இந்த மோதல்களை முடித்து வைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். பாகிஸ்தான் விவகாரம் பலரின் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகம்” என்றார். அவரின் இந்த கருத்துகள் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.

    இந்தக் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி எம்.பி அசோக் குமார் மிட்டல்,”இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, பிரான்ஸாக இருந்தாலும் சரி, உலகில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது. பிரதமர் மோடி வசுதைவ குடும்பகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், நாங்கள் வளர விரும்புகிறோம், மற்றவர்களையும் வளர விட விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் பேசுகையில், “பாகிஸ்தான் 1947ல் பிறந்தது, அவர்கள் காஷ்மீரைத் தாக்கினர், பின்னர் அவர்கள் 1965ல் இந்தியாவைத் தாக்கினர். உலகில் எங்கும் ஒரு ராணுவம் தனது சொந்தப் பெண்களையும் மக்களையும் கொன்று, கொன்று, பாலியல் வன்கொடுமை செய்ததை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். பாகிஸ்தான் அதை கிழக்கு பாகிஸ்தானில் செய்தது, அது இப்போது வங்கதேசமாக உள்ளது.” என்றார்.

    பாஜக எம்.பி கேப்டன் பிரிஜேஷ் சௌதா, “இது பாகிஸ்தானின் அரசு ஆதரவு பயங்கரவாதம் என்பதை பல்வேறு நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, நாம் அதற்கு பலியாகலாம்; நாளை, உலகம் இதற்கு பலியாகிவிடும். பல நாடுகள் இந்தியா உட்கார்ந்து பேச வேண்டும் என்று கூறுகின்றன. யாரிடம் பேசுவது என்பதுதான் கேள்வி. பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் நாம் பேச வேண்டுமா? அல்லது அங்குள்ள இராணுவத்துடன் நாம் பேச வேண்டுமா? அல்லது இஸ்லாமிய மதகுருமார்களுடன் பேச வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவில் ராஜீவ் ராய் (சமாஜ்வாதி), மியான் அல்டாப் அகமது (ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி), பிரிஜேஷ் சவுடா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ராஷ்டிரிய ஜனதா தளம்), அசோக் குமார் மித்தல் (ஆம் ஆத்மி), முன்னாள் தூதர் ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

    July 26, 2025
    தேசியம்

    கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    July 26, 2025
    தேசியம்

    ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

    July 26, 2025
    தேசியம்

    பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

    July 26, 2025
    தேசியம்

    இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை: ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் தொடங்கி வைத்தார்

    July 26, 2025
    தேசியம்

    ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி
    • சிறுநீரக சேதம் விளக்கப்பட்டுள்ளது: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகள் உங்கள் சிறுநீரகங்களுக்கு என்ன செய்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்
    • தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
    • கோல்ட் பிளே ஸ்டாரின் முன்னாள் க்வினெத் பேல்ட்ரோ வானியலாளரின் “செய்தித் தொடர்பாளர்” ஆகிறது: சமூக ஊடகங்கள் வெடிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.