Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
    தேசியம்

    ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை கடந்த 18-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இடைநீக்க உத்தரவை திரும்ப பெறுவது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இடைநீக்கத்தை ரத்து செய்ய மறுப்பு: தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தவே, ‘‘சிறுவன் கடத்தல் தொடர்பான குற்ற வழக்கில் ஏடிஜிபி மீதான குற்றச்சாட்டு மற்றும் விசாரணை நிலுவையில் இருப்பதால், இடைநீக்கம் செய்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெறப்போவது இல்லை. விசாரணை முடியும் வரை இடைநீக்கம் தொடரும். (சில ஆவணங்களை தாக்கல் செய்தார்) சில நேரங்களில், இவ்வாறுதான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் எங்களை கட்டாயப்படுத்துவது போல உள்ளது’’ என்றார்.

    அதற்கு நீதிபதிகள், ‘‘சில நேரங்களில், வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றங்கள் தங்கள் வரம்பை மீறி நிர்வாக முடிவுகளையும் எடுப்பது அதிருப்தி அளிக்கிறது’’ என்றனர். இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து அரசின் விளக்கத்தை கேட்டு கூறுமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை சிறிது நேரம் தள்ளி வைத்தனர்.

    சிபிசிஐடிக்கு மாற்றம்: மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது ஏடிஜிபி தரப்பில், ‘‘இது முறையான நடவடிக்கை அல்ல. எனவே, பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், ‘‘சிறுவன் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் ஏடிஜிபியை கைது செய்து விசாரி்க்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றவும் தலைமை நீதிபதியை அறிவுறுத்துகிறோம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    July 21, 2025
    தேசியம்

    உ.பி-யில் கன்வர் யாத்ரீகர்களுக்கு மலர் கொடுத்து வழியனுப்பிய முஸ்லிம்கள்!

    July 21, 2025
    தேசியம்

    பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ராஜினாமா

    July 21, 2025
    தேசியம்

    மழைக்கால கூட்டத்தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும்: பிரதமர் மோடி

    July 21, 2025
    தேசியம்

    சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

    July 21, 2025
    தேசியம்

    பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: 70 சதவீதம் தீக்காயமடைந்த ஒடிசா சிறுமி

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • ‘இதுவே கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை உடனே வழங்குக’ – அன்புமணி
    • சீனப் பெண் மூளை இரத்தக்கசிவுக்கு ஆளாகிறாள், தீவிர வெப்ப அலைகளின் போது சூரிய ஒளியின் பின்னர் கோமாவில் நழுவுகிறாள்; பாதுகாப்பான வரம்பு மற்றும் உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
    • ஏன் இத்தனை காயங்கள்? என்ன நடக்கிறது இந்திய அணியில்?- தெளிவற்ற சூழல் ஏன்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.