Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்
    தேசியம்

    ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்

    adminBy adminOctober 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஐ தொழில்நுட்பத்துக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அடிப்படையாக இருக்க வேண்டும்: எஸ் ஜெய்சங்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

    செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை. வாக்குறுதிகளும், மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்பாடுதான் தீர்மானிக்கிறது.

    இன்று நாம் மிகப்பெரிய மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். இந்தியாவில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஜி20 அமைப்புக்கு தலைமை வகித்தபோது நாங்கள் இதை நிரூபித்தோம்.

    நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு முக்கியம் என்பதை வலுவாக நாங்கள் வலியுறுத்தினோம். அதேநேரேத்தில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்பது நம்பிக்கை, பாதுகாப்பு, நியாயம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம்.

    செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினர் என்ற வகையில், பொறுப்பான, உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவை வலியுறுத்தும் புதுடெல்லி பிரகடனங்களை நாங்கள் ஊக்குவித்தோம். பிளெட்ச்லி பார்க், சியோல் ஆகிய நகரங்களில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடுகளில் நாங்கள் பங்கேற்றோம். கடந்த ஆண்டு பாரிஸ் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டுக்கு இணை தலைமை ஏற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சி மாநாடு, இந்த உண்மையான தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுவை அக்.10-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

    October 7, 2025
    தேசியம்

    இருமல் மருந்து விஷமாக மாறி 16 குழந்தைகள் உயிரைப் பறித்த கொடூரம்

    October 7, 2025
    தேசியம்

    பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ள 25 வயது நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர்

    October 7, 2025
    தேசியம்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் சஸ்பெண்ட்

    October 7, 2025
    தேசியம்

    ‘எனக்கு அதில் வருத்தமில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்!

    October 7, 2025
    தேசியம்

    சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு 

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகர் அஜித்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து
    • நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தண்டிக்கப்பட வேண்டும்: இந்தியக் கம்யூ. கோரிக்கை
    • அரோமாதெரபி சாத்தியமான தீங்கு விளைவிக்க முடியுமா? இந்த மாற்று மருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்!
    • இனி கரூர் போன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதே நமது கடமை: கமல்ஹாசன் எம்.பி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.