Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்
    தேசியம்

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்

    adminBy adminAugust 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்​தவர் பிரமானந்த் குப்​தா. இவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி வந்​தார். இவருடைய மனை​விக்​கும் வேறு குடும்​பத்தை சேர்ந்த 2 சகோ​தரர்​களுக்​கும் இடை​யில் சொத்து தொடர்​பான பிரச்​சினை இருந்து வந்​துள்​ளது. இந்​நிலை​யில், பட்​டியலினத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோ​தரர்​கள் மீது பாலியல் வன்​கொடுமை வழக்கு தொடுத்​தார். அவர் சார்​பில் பிர​மானந்த் குப்தா வாதாடி​னார்.

    முன்​ன​தாக பெண்​ணின் புகார் குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிர​மானந்த் குப்தா போலி​யாக பாலியல் வன்​கொடுமை வழக்கு பதிவு செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மேலும், 2 சகோ​தரர்​கள் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படும் இடத்​தில் அந்த நேரத்​தில் சம்​பந்​தப்​பட்ட பெண் இல்லை என்​பதும் உறு​திப்​படுத்​தப்​பட்​டது.

    இந்த வழக்கு லக்​னோ​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டது. நீதி​மன்​றத்​தில் அரசு சிறப்பு வழக்​கறிஞர் அரவிந்த் மிஸ்ரா வாதிடு​கை​யில், ‘‘வழக்​கறிஞர் குப்தா ஏற்​கெனவே போலி வழக்கு தொடுத்த குற்​றத்​துக்​காக ஒரு மாதம் சிறை தண்​டனை அனுப​வித்​துள்​ளார்.

    எதிர்​தரப்​பினரை சித்​ர​வதை செய்ய வேண்​டும் என்ற உள்​நோக்​கத்​துடன் பட்​டியலினத்தை சேர்ந்த பெண்​ணுடன் கூட்டு சேர்ந்து அவர் தொடர்ந்து போலி பாலியல் வழக்​கு​களை தொடுத்து வந்​துள்​ளார். இது​போல் குப்தா போலி​யாக 18 வழக்​கு​களும் சம்​பந்​தப்​பட்ட பெண் 11 வழக்​கு​களும் தொடுத்​துள்​ளனர். அவை போலி​யானவை.” என்​றார்.

    அனைத்து தரப்பு வாதங்​களும் முடிந்த நிலை​யில், சிறப்பு நீதி​மன்​றம் அளித்த தீர்ப்​பில் கூறியிருப்பதாவது: போலி வழக்​கு​கள் பதிவு செய்து வந்த வழக்​கறிஞர் குப்​தாவுக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​படு​கிறது. வழக்​கறிஞர் குப்தா தன்னை தவறாக வழிநடத்​தி​ய​தாக கூறிய​தால், சம்​பந்​தப்​பட்ட பெண்ணை இந்த நீதி​மன்​றம் கடுமை​யாக எச்​சரித்து விடுவிக்​கிறது.

    எஸ்​சி, எஸ்டி சட்​டத்​தின் கீழ் எதிர்​காலத்​தில் இது​போல் போலி வழக்​கு​களை தொடுத்​தது தெரிய வந்​தால், அந்த பெண் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், வழக்​கறிஞர் குப்தா நீதி​மன்​றத்​துக்​குள் நுழைய தடை விதிக்​கப்​படு​கிறது.

    அவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​ற​வும் தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு நகலை உத்தர பிரதேச மாநிலம் அலகா​பாத் பார் கவுன்​சிலுக்கு அனுப்பி வைக்க வேண்​டும். அதே​போல் லக்னோ போலீஸ் ஆணை​யருக்​கும் நீதி​மன்ற தீர்ப்​பின் நகலைஅனுப்பி வைக்க வேண்​டும்.

    எஸ்​சி, எஸ்சி சட்​டத்​தின் கீழ் எந்த பெண்​ணாவது பாலியல், கூட்டு பாலியல் தொடர்​பாக புகார் கொடுத்​தால், சம்​பந்​தப்​பட்ட பெண் வேறு எங்​காவது பாலியல் புகார் கொடுத்​திருக்​கிறா​ரா, தொடர்ந்து பாலியல் புகார் கொடுத்​திருக்​கிறாரா என்​பதை ஆணை​யர் விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு சிறப்​பு நீதி​மன்​றம்​ தீர்​ப்​பளித்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொல்கத்தாவில் போராட்டம்

    September 16, 2025
    தேசியம்

    டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா

    September 16, 2025
    தேசியம்

    வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    September 16, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: விசாரணை அக்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    September 16, 2025
    தேசியம்

    16-வது முப்படை தளபதிகள் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கினார் பிரதமர் 

    September 16, 2025
    தேசியம்

    வன்முறையில் ஈடுபட்ட 5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் மாநில அரசு முடிவு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூட்டாட்சிக்கு எதிராக இந்தியை திணிக்கும் முயற்சி: அமித் ஷாவுக்கு தவெக கண்டனம்
    • டம்பிள் ட்ரையர், ரேடியேட்டர்கள் அல்லது டிஹைமிடிஃபையர் இல்லாமல் வீட்டிற்குள் வேகமாக துணிகளை எப்படி உலர்த்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!
    • “பாமக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” – உதயநிதி விருப்பம்
    • பெண்களில் நாள்பட்ட அழற்சி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது: அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், அது இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது – இந்தியாவின் காலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.