Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எல்லை பதற்றம்: காஷ்மீரில் இடம் மாறித் தவிக்கும் பாம்புகளை மீட்கும் எஸ்ஒஎஸ் அமைப்பு
    தேசியம்

    எல்லை பதற்றம்: காஷ்மீரில் இடம் மாறித் தவிக்கும் பாம்புகளை மீட்கும் எஸ்ஒஎஸ் அமைப்பு

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எல்லை பதற்றம்: காஷ்மீரில் இடம் மாறித் தவிக்கும் பாம்புகளை மீட்கும் எஸ்ஒஎஸ் அமைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் மோதலால் அங்கு வாழும் பாம்புகளும் பாதிக்கப்பட்டு அவைகள் இடம்மாறித் தவிக்கின்றன. பாம்புகளை மீட்கும் பணியில் எஸ்ஒஎஸ் எனும் சர்வதேச அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவு ஈடுபட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் எதிர்பாராத துயரங்களை சந்தித்து வருகின்றன. காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், மனித வாழ்விடங்கள் இயற்கையான வாழ்விடங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது முதல் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான எஸ்ஒஎஸ் வனவிலங்குகளின் மீட்பு பணியில் இறங்கி உள்ளது.

    இந்த தொண்டு நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன.. இவற்றில் பெரும்பாலனவை எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வருபவை. இப்படி வரும் பல அழைப்புகளுக்கு எஸ்ஒஎஸ் தொடர்ந்து பதிலளித்து வருகிறது.

    போர்ச் சூழலால், எல்லைகளில் அதிகரித்து வரும் வாழ்விட இடையூறுகளுக்கு இடையே அங்கு வாழும் பாம்புகளின் வாழ்க்கையும் பாதித்துள்ளது. இடையூறு காரணமாக பாம்புகள் தங்களுக்கான புதிய தங்குமிடம் அல்லது உணவைத் தேடத் துவங்கியுள்ளன. இப்படி வழிமாறிய பாம்புகளை மீட்பதற்கான முதல் அழைப்பு எஸ்ஒஎஸ் ஜம்மு-காஷ்மீர் பிரிவிற்கு பாம்பூரில் இருந்து வந்தது. அங்கு 4.5 அடி நீளமுள்ள எலிப் பாம்பு (Ptyas mucosus) ஒரு காரின் பானட்டில் கிக்கியிருந்தது.

    வாகன உரிமையாளர் தனது வாகனத்தில் வெளியேச் செல்லத் தயாரானபோது, அப்பாம்பைக் கண்டார். இதை மீட்க வேண்டி அவர்கள் உடனடியாக வனவிலங்கு எஸ்ஒஎஸ் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டனர். வனவிலங்கு எஸ்ஒஎஸ் இல் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரிவின் தலைவரான ஆலியா மிர், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, பாம்பை வெற்றிகரமாக வெளியேற்றினார். இதனால் பாம்பு மற்றும் வாகனத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.

    சிறிது நேரத்திற்குப் பிறகு, புட்காமில் இரண்டு தனித்தனி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மீட்பில், 5 அடி நீளமுள்ள எலிப்பாம்பு ஒன்று கோழிக்கூட்டின் வலையில் சிக்கி இருந்தது. அந்த பாம்பு, மிகவும் சோர்வடைந்து சுவாசிக்க சிரமப்பட்டது. அதை மீட்க தம்மிடம் இருந்த சிறப்பு கருவிகளை பயன்படுத்திய ஆலியா, வலையை மெதுவாக வெட்டி எடுத்து பாம்பைப் பாதுகாப்பாக விடுவித்தார். சில நாட்களுக்குப் பிறகு அதே கோழிக் கூட்டில் சிக்கிய மற்றொரு எலிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது .

    இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வனவிலங்கு எஸ்ஒஎஸ்-ன் இணைநிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் சத்யநாராயண் கூறுகையில், “உணர்திறன் மண்டலங்களில் நகர்ப்புற இருப்பு அதிகரித்து வருகிறது. இதனால், வனவிலங்குகள் பெரும்பாலும் இடம்பெயரவோ அல்லது திசைதிருப்பவோப்படுகின்றன. சமூகப் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனை உறுதி செய்வதற்காக விரைவாக செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

    எஸ்ஒஎஸ் இன் இணை நிறுவனர் மற்றும் செயலாளரான கீதா சேஷமணி குறிப்பிடுகையில்,“மக்கள் பயத்தை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அமைதியான சகவாழ்வு சாத்தியமாகும். எங்கள் ஹெல்ப்லைனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அழைப்பும் அந்த திசையின் ஒரு படியாகும். எந்த சூழலில் நாம் வனவிலங்குகளின் மீட்புப் பணிக்கு தயாராக உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

    ஜம்மு-காஷ்மீர் பிரிவின் தலைவர் ஆலியா மிர் கூறுகையில், “காஷ்மீர் போன்ற பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதர்களும் வனவிலங்குகள் மோதல் அதிகம். விலங்குகள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முன் நாம் செயல்பட முயல்கிறோம். இதற்காக, எங்களுக்கு விரைவாக வாய்ப்பளித்த குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கைகளின் போது மீட்கப்படும் பாம்புகள், மருத்துவக் கண்காணிப்புக்காக வனவிலங்கு எஸ்ஒஎஸ் மீட்பு வசதிக்கு கொண்டு செல்லப்பட்டன, மேலும், அவை நலமாக இருப்பதை உறுதிசெய்த பின், மீண்டும் பொருத்தமான காட்டு வாழ்விடங்களுக்குள் விடப்பட்டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 
    • ஜெஃப் பெசோஸின் குழந்தைகளைச் சந்திக்கவும்: முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் உடன் அவரது நான்கு குழந்தைகளைப் பற்றி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் பட பணிகள் பூஜையுடன் தொடக்கம்
    • காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு
    • உங்கள் பயண வாளி பட்டியலில் சேர்க்கப்படும் பி.எம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.