Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
    தேசியம்

    எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

    adminBy adminMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில்,

    100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பாக். தாக்குதல் முறியடிப்பு: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது.

    பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய படைகள் வெற்றிகரமாக நடுவானிலேயே தகர்த்து அழித்து,பாகிஸ்தானின் பதில் தாக்குதலை முறியடித்தன. பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து, இந்திய போர் விமானங்கள் கடந்த 10-ம் தேதி காலை தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

    இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

    மீண்டும் அத்துமீறல்: ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த சிலமணி நேரங்களில் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறியது. ஜம்மு காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மாநில எல்லையில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய படைகள் இடைமறித்து அழித்தன. இந்திய தரப்பும் சளைக்காமல் பதிலடி கொடுத்த நிலையில், எல்லையில் குண்டு சத்தம் நேற்று முன்தினம் இரவு ஓய்ந்தது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.இதில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதன்பிறகு, எல்லையில் உள்ள ராணுவ கமாண்டர்களுடன் பேசிய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தார். எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கினால், பிரதமர் உத்தரவுப்படி தக்க பதிலடி கொடுக்குமாறு கமாண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இமாச்சலில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 116 பேர் உயிரிழப்பு: ரூ.1,230 கோடிக்கு சேதம்

    July 20, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

    July 20, 2025
    தேசியம்

    சத்தீஸ்கர் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 6 பேர் உயிரிழப்பு

    July 20, 2025
    தேசியம்

    2036-ல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 நிதியுதவி: அமித் ஷா தகவல்

    July 20, 2025
    தேசியம்

    மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே கருத்து

    July 20, 2025
    தேசியம்

    மதமாற்றத்தில் சாங்குர் பாபா கும்பலுக்கு தமிழகத்துடன் தொடர்பு: சென்னை வருகிறது உத்தர பிரதேச மாநில ஏடிஎஸ் படை

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது
    • இன்சுலின் எதிர்ப்பை இயற்கையாகவே மாற்றியமைக்க 5 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 116 பேர் உயிரிழப்பு: ரூ.1,230 கோடிக்கு சேதம்
    • பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
    • ஓசெம்பிக் மற்றும் வெகோவி டிமென்ஷியா அபாயத்தை 45% குறைத்து நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம், ஆய்வு கண்டுபிடிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.