Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் – மத்திய அரசு விரைவில் ஆலோசனை
    தேசியம்

    எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் – மத்திய அரசு விரைவில் ஆலோசனை

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் – மத்திய அரசு விரைவில் ஆலோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தீ விபத்தின் போது எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந் வர்மா. டெல்லியில் இவர் வசித்த அரசு குடியிருப்பின் வளாகத்தில் பொருட்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினர் அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் இருப்பதை கண்டறிந்து மீட்டனர்.

    இது குறித்த தகவல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் கிடையாது என நீதிபதி யஷ்வந்த வர்மா கூறினார். இது குறித்து உள் விசாரைணைக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் அறிக்கை விவரம் வெளியிடப்படவில்லை.

    நீதிபதி யஷ்வந்த வர்மாவை ராஜினாமா செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வலியுறுத்தினார். ஆனால், நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

    நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அப்போதை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடிதம் எழுதினார். அதோடு நீதபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றம்சாட்டி விசாரணை குழு அளித்த அறிக்கையையும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

    நீதிபதி யஷ்வ்ந்த வர்மா பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கவில்லை. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளது. யஷ்வ்ந்த வர்மா மீது பதவு நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு முன்பாக, இது குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஆலோசித்து அதன் நம்பிக்கையை பெற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

    வெளிப்படையான ஊழலை புறக்கணிப்பது சிரமம் என்பதால், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மான நடவடிக்கை குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மாநிலங்களவையில் குறைந்த 50 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும். மக்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    இந்த தீர்மானம் 3-ல் 2 பங்கு ஆதரவுடன் மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ நிறைவேறினால் விசாரணை குழு அமைக்க மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவார். உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நடுவர் ஆகியோர் அடங்கிய குழு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதனடிப்படையில் நீதிபதி யஷ்வந்த வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு

    December 2, 2025
    தேசியம்

    மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர்

    December 2, 2025
    தேசியம்

    உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு 

    December 2, 2025
    தேசியம்

    1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்

    December 2, 2025
    தேசியம்

    வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

    December 2, 2025
    தேசியம்

    மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ
    • திமுக, அதிமுகவால் ‘டேக் ஆஃப்’ ஆகாத மதுரை விமான நிலையம்!
    • உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நிறுத்துவதற்கான சிறந்த உணவுப் பழக்கத்தை இருதயநோய் நிபுணர்கள் வெளிப்படுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு பெரிய சூரிய புள்ளி பூமியின் பக்கம் சுழலும் போது ஏன் ஒரு சிறிய சூரிய புள்ளி வெடித்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.