Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி
    தேசியம்

    எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    பிஹார் மாநிலத்துக்கான, ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று (செப். 2) தொடங்கிவைத்தார். அப்போது இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு ரூ.105 கோடியை பிரதமர் பரிமாற்றம் செய்தார். இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு வாயிலாக இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது.

    பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கும் இந்த கடன் சங்கம் கடனுதவி வழங்க இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலையில் பெண் தொழில்முனைவோர் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சங்கத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் நடத்திய ஒரு பேரணியில் மறைந்த எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். ஒரு அரசியல் மேடையில் இறந்த எனது தாயார் இப்படி அவமதிக்கப்படுவது கற்பனை செய்து பார்க்க முடியாதது.

    அம்மாதான் நமது உலகம். அம்மாதான் நமது சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த பிஹாரில் எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். இந்த அவமதிப்பு எனது தாய்க்கு மட்டுமானது அல்ல. அவர்கள், இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை அவமதித்துள்ளார்கள். இந்த சம்பவத்தைப் பார்த்தும், கேட்டும் பிஹாரின் ஒவ்வொரு தாய்மார்களும் எவ்வளவு மோசமாக உணர்ந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எனக்கு எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு வலியை பிஹார் மக்களும் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் ஏன் இழுக்க வேண்டும்? ஏன் அவரை தாக்க வேண்டும்? இதுபோன்று பெண்களை அவமதிப்பவர்கள், பெண்களை பலனீனமானவர்களாகக் கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு!

    September 2, 2025
    தேசியம்

    கட்சிவிரோத நடவடிக்கை: கேசிஆரின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

    September 2, 2025
    தேசியம்

    இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

    September 2, 2025
    தேசியம்

    மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ”எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை

    September 2, 2025
    தேசியம்

    மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை காலி செய்ய மனோஜ் ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

    September 2, 2025
    தேசியம்

    ‘ஆந்திராவை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம்’ – சந்திரபாபு நாயுடு சூளுரை

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா சாப்டர் 1’
    • மதுரையில் மக்கள் சந்திப்பில் மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த அமைச்சர் பிடிஆர் – பின்னணி என்ன?
    • ஹை ஐ.க்யூ – டைம்ஸ் ஆஃப் இந்தியாவை விட ஒருவரின் வெற்றியை சிறப்பாக கணிக்கும் சிறந்த ஆளுமை பண்பை உளவியலாளர் வெளிப்படுத்துகிறார்
    • தீபாவளிக்கு வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’
    • “மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.