Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது” – ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி
    தேசியம்

    “எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது” – ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது” – ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய வீடியோவை இணைத்து, கடந்த 17-ம் தேதி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதில், “நமது தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஒரு குற்றம். இந்திய அரசு இதைச் செய்ததாக வெளியுறவுத் துறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. யார் இதை அங்கீகரித்தார்கள்? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இது தொடர்பாக ஜெய்சங்கர் எவ்வித பதிலும் அளிக்காத நிலையில், இந்த விவகாரத்தை ராகுல் காந்தி இன்று மீண்டும் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெய்சங்கரின் மவுனம், அவர் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல – அது மிகவும் மோசமானது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்குத் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது ஒரு தவறு அல்ல. இது ஒரு குற்றம். மேலும் தேசம் உண்மையை அறியத் தகுதியானது” என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ராகுல் காந்தியின் கூற்றை மறுத்த வெளியுறவு அமைச்சகம், “ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்தோம். இது ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடங்குவதற்கு முன்பு என தவறாக சித்தரிக்கப்படுகிறது. முற்றிலும் தவறான விளக்கத்தால் உண்மை மறைக்கப்படுகிறது” என்று தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெளியுறவுத்துறையின் மவுனம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கப்பட்டது? இந்த செயல்பாட்டு ரகசியத்தை மீறுவதற்கு யார் அனுமதி அளித்தனர்? இதன் காரணமாக நமது ஆயுதப்படைகள் என்ன விளைவுகளை எதிர்கொண்டன?

    இது ஒரு வழக்கமான முடிவு அல்ல. இது ஒரு ராஜதந்திர சம்பிரதாயம் அல்ல. எதிரிக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதால் இந்திய விமானங்கள் தொலைந்து போயிருந்தால் – அது ஒரு தவறு அல்ல. அது ஒரு துரோகம். நாடு உண்மையை அறிய தகுதியானது. நாடாளுமன்றம் பொறுப்புக்கூறத் தகுதியானது. மேலும் பொறுப்பானவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தானுக்குத் தகவல் அளித்ததாக ஜெய்சங்கர் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) முன்னர் மறுத்துள்ளது. எக்ஸ் பதிவு ஒன்றில், அமைச்சர் அத்தகைய எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறார் என்றும் PIB இன் உண்மை சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காக காங். 10 வாக்குறுதிகள் – பிஹாரில் ராகுல் காந்தி வெளியீடு

    September 24, 2025
    தேசியம்

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

    September 24, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் – வன்முறையால் பதற்றம்

    September 24, 2025
    தேசியம்

    விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்து ஆப்கனிலிருந்து டெல்லி வந்த சிறுவன்

    September 24, 2025
    தேசியம்

    “திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்க வேண்டும்” – தமிழிசை

    September 24, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக் பாஜக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நெகட்டிவ் விமர்சகர்களால் பேராபத்து” – ‘மெய்யழகன்’ அனுபவம் பகிரும் இயக்குநர் பிரேம் குமார்
    • மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்
    • 50 களில் சகிப்புத்தன்மையை உருவாக்க உதவும் உட்புற நடை முறைகள்
    • ‘ஓஜி’ ரிலீஸுக்காக திரைகளை விட்டுத் தந்த ‘மிராய்’ படக்குழு!
    • சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.