Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் அமலாக்கத் துறையின் 98% வழக்குகள், எஞ்சிய 2%…’ – திரிணமூல் எம்.பி
    தேசியம்

    ‘எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் அமலாக்கத் துறையின் 98% வழக்குகள், எஞ்சிய 2%…’ – திரிணமூல் எம்.பி

    adminBy adminMay 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் அமலாக்கத் துறையின் 98% வழக்குகள், எஞ்சிய 2%…’ – திரிணமூல் எம்.பி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன .எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னரே அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதற்கு முன்னர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்றதாகவே இருந்தன” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாக்கெட் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அந்தப் பதிவில், “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன .எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன.

    கடந்த 11 ஆண்டுகளில் 5,297 வழக்குகள் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நீதிமன்ற விசாரணைக்கு சென்றவை வெறும் 47 வழக்குகள் மட்டுமே. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவை 0.7 சதவீதம் மட்டுமே. அப்படியென்றால், பதிவாக்கும் 1000 வழக்குகளில், 7 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படுகிறது. அதனால், அமலாக்கத் துறை பதிவு செய்யும் 1000 வழக்குகளில் 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைப்பதற்காக மட்டுமே பதியப்படுகிறது.

    ஏனெனில் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் ( Prevention of Money Laundering Act ) கீழ் கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறுவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. விசாரணை நடைமுறைக் காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் வைக்கப்படுவதையே மத்திய அரசு ஒருவித தண்டனையாகக் கருதுகிறது. இந்த வழக்குகளை அப்பாவிகளை மிரட்ட, அவர்களை உடைந்துபோகச் செய்து தமது உத்தரவுகளுக்குப் பணியவைக்கச் செய்ய பாஜக பயன்படுத்திக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மூன்று பேர் மட்டுமே விடுவிப்பு – ஆனால், அமலாக்கத் துறை இயக்குநரோ, “அமலாக்கத் துறை (இடி) விசாரணை நடத்தி வரும் 1700 பண மோசடி வழக்குகள் தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளன. இடி தொடர்ந்த 47 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. மூன்று பேர் மட்டுமே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஎம்எல்ஏ-வின் கீழ் பதியப்பட்ட 1,739 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

    மேலும், “பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதி அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே பொதுவான காரணமாக இருக்கலாம். அமலாக்கத் துறையை பொருத்தவரையில் தனது விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தடயவியலையும் பயன்படுத்தும்” என்றும் கூறியிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாடகர் ஜுபின் கார்க்குக்கு நினைவிடம் அமைக்கிறது அசாம் அரசு

    September 22, 2025
    தேசியம்

    அவதூறு குற்றமற்றது என்று அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: உச்ச நீதிமன்றம் கருத்து

    September 22, 2025
    தேசியம்

    ‘ஒவ்வொரு வீட்டுக்கும் புன்னகை உறுதி…’ – ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

    September 22, 2025
    தேசியம்

    டெல்லி கலவர வழக்கில் ஜாமீன் கோரி உமர் காலித் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு

    September 22, 2025
    தேசியம்

    போலீஸ் ஆவணங்கள், பொது இடங்களில் சாதியை குறிப்பிட தடை: உ.பி. அரசு நடவடிக்கை

    September 22, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்
    • லுகோவோரின் என்றால் என்ன? மன இறுக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு
    • காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.