Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 
    தேசியம்

    எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​வாக்கு திருட்டு குற்​றச்​சாட்டை நிராகரித்த தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், மக்​களை தவறாக வழிநடத்​தும் மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்​தி, அரசி​யல் சாசன சட்​டத்தை அவம​திக்​கிறார் என கூறி​யுள்​ளார்.

    பிஹாரில் வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில், 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. தேர்​தல் ஆணை​யம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்​வ​தாக மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

    இந்​நிலை​யில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் டெல்​லி​யில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிரி​களும் இல்​லை, ஆதர​வாளர்​களும் இல்​லை. எங்​களுக்கு அனைத்து அரசி​யல் கட்​சிகளும் சரி சமம்​தான். வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டும் என அனைத்து கட்​சிகளும் கடந்த 20 ஆண்​டு​களாக, கோரிக்கை விடுத்து வந்​தன. அதனால் தேர்​தல் ஆணை​யம் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த பணியை பிஹாரில் இருந்து தொடங்​கியது. அனைத்து வாக்​காளர்​கள், அரசி​யல் கட்​சிகள் நியமித்த 1.6 லட்​சம் வாக்​குச் சாவடி முகவர்​கள் ஆகியோ​ருடன் இணைந்து செயல்​பட்டு வெளிப்​படை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்டு வரைவு வாக்​காளர் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது.

    எனவே, வாக்கு திருட்டு போன்ற வார்த்​தைகளை பயன்​படுத்தி மக்​களை தவறாக வழிநடத்​து​வது அரசி​யல்​சாசன சட்​டத்தை அவம​திக்​கும் செயல். வாக்கு திருட்​டு, இரட்டை ஓட்டு போன்ற குற்​றச்​சாட்​டு​கள் எல்​லாம் ஆதா​ரமற்​றவை. பிஹார் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்த பணி​களை மேற்​கொண்ட அனை​வரும் வெளிப்​படை​யான முறை​யில் செயல்​பட்டு வாக்​காளர் பட்​டியலை உரு​வாக்​கியது வெற்​றிகர​மான செயல். இது குறித்து சில அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தவறான தகவல்​களை பரப்​புவது மிக​வும் கவலை​யளிப்​ப​தாக உள்​ளது. பிஹாரில் வரைவு வாக்​காளர் பட்​டியலில் வாக்​காளர்​களை சேர்க்க உரிமை கோர​வும், எதிர்ப்பு தெரிவிக்​க​வும் அனைத்து கட்​சிகளுக்​கும் தேர்​தல் ஆணை​யம் அழைப்பு விடுக்​கிறது. அதற்கு இன்​னும் 15 நாட்​கள் உள்​ளன. 45 நாட்​களுக்​குள் புகார் மனுக்​கள் அளிக்​கப்​ப​டா​மல், ஓட்டு திருட்டு என குற்​றம் சுமத்​து​வது அரசி​யல் சாசனத்தை அவம​திப்​பது போன்​றது. இவ்​வாறு அவர் கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்

    August 18, 2025
    தேசியம்

    டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

    August 18, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    August 18, 2025
    தேசியம்

    சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை தடை கோரி அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

    August 18, 2025
    தேசியம்

    என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு!

    August 17, 2025
    தேசியம்

    “அறிவுத்திறனால் பொது வாழ்வில் தன்னை வேறுபடுத்திக் காட்டியவர்” – சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்’ – நாகார்ஜுனா மகிழ்ச்சி
    • தனி​யார் தேயிலை தோட்​டத்​தில் பெண் சிறுத்தை உடல் மீட்பு
    • மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்
    • திருஞானசம்பந்தர் மீது காதல் கொண்ட ‘பூம்பாவை’!
    • திமுக கூட்டணி கட்சிகள் ஆட்​சியில் பங்கு கேட்கவில்லை: தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.