Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்…” – பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி திவேதி எச்சரிக்கை
    தேசியம்

    “உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்…” – பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி திவேதி எச்சரிக்கை

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்…” – பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி திவேதி எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.

    ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, “இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா இல்லையா என்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம்.

    உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போதே முழுமையாக தயாராக இருங்கள். கடவுள் விரும்பினால், வாய்ப்பு விரைவில் வரும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிலவும்போது விழிப்புணர்வுதான் மிகவும் முக்கியமானதாகிறது. இந்தியா தனது ராணுவ மோதலின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை அம்பலப்படுத்தியது. இல்லாவிட்டால், அவை உலகின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானுக்குள் ஒன்பது பயங்கரவாத தளங்களை இந்தியா குறிவைத்தது. இதில், ஏழு இந்திய ராணுவமும், இரண்டு விமானப்படையும் குறிவைத்தன.

    பயங்கரவாதிகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே இலக்குகளை நாங்கள் அடையாளம் கண்டோம். பயங்கரவாதிகளின் தளங்களை தாக்குவதே எங்கள் நோக்கம். அந்நாட்டின் குடிமக்கள் மீது எங்களுக்கு எந்த புகாரும் இல்லை. அவர்களின் நாடு பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதால்தான் அந்த இலக்குகள் தாக்கப்பட்டன” என தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா மே 7-ம் தேதி ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் கடுமையான பதிலடியை அடுத்து போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததை ஏற்று மே 10-ம் தேதி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பாக். பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா

    October 3, 2025
    தேசியம்

    பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 3.66 லட்சம் பேர் நீக்கம் ஏன்? – தீபங்கர் பட்டாச்சார்யா

    October 3, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவம் இழந்தது என்ன? – பட்டியலிட்ட இந்திய விமானப் படை

    October 3, 2025
    தேசியம்

    சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு

    October 3, 2025
    தேசியம்

    சீனாவின் முட்டுக்கட்டையை முறியடிக்க இந்தியாவிலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் உற்பத்தி: ஜெர்மனி தூதர் அறிவிப்பு

    October 3, 2025
    தேசியம்

    குரு நானக் ஜெயந்தி வழிபாடு: சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி’ – ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு
    • ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • பாபுகோஷா வெர்சஸ் நாஷ்பதி: செரிமான ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் வைட்டமின் சி நன்மைகளை ஒப்பிடுதல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி எம்07 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்
    • கரூர் நெரிசல் உயிரிழப்பு தொடர்பான மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இன்று விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.