Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி
    தேசியம்

    உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் காரணமாக விராட் கோலி கைது செய்யப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

    இந்த கூட்ட நெரிசலுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது சமூக ஆர்வலர் எச்.எம்.வெங்கடேஷ் புகாரளித்தார், ஆனால் கோலி மீது எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதனையடுத்து #ArrestKohli என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தது. அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் லண்டனுக்கு புறப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனிதாபிமானத்தையும் பலர் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த டிசம்பரில் ஹைதராபாத் தியேட்டரில் ‘புஷ்பா – 2’ படத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.

    ஹைதராபாத் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்து அவரது இளம் வயது மகன் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    தற்போதைய சம்பவத்துக்காக கோலியை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், ‘விராட் கோலி இறந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தாரா?. விசுவாசமான ரசிகர்களின் குடும்பங்களைச் சந்திக்க லண்டன் பயணத்தை அவர் தாமதப்படுத்தியிருக்க முடியாதா?. அவர் எப்படி இவ்வளவு மனிதாபிமானமற்றவராக இருக்க முடியும்? தீபாவளியின் போது விளம்பரங்களுக்காக மட்டுமே அவர் தனது மனிதாபிமானத்தைக் காட்டுகிறாரா?. இதுபற்றி நீங்கள் கவலைப்படுவதாகக் கூட தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா, தனது அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜுவை பணிநீக்கம் செய்தார். அவர் இதுகுறித்து எந்த காரணங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் மாநில சட்டமன்றத்தில் ஆர்சிபியின் பாராட்டு விழாவிற்கு கோவிந்தராஜுதான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கோவிந்தராஜு தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகிகள், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டிஎன்ஏ மற்றும் கிரிக்கெட் அமைப்பின் உயர் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய சித்தராமையா வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டதை அடுத்து, மூன்று டிஎன்ஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், ஜூன் 16 ஆம் தேதி வரை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மூன்று மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிட குக்கி-ஸோ கவுன்சில் ஒப்புதல்: மத்திய அரசு தகவல்

    September 4, 2025
    தேசியம்

    இந்தூர் மருத்துவமனையில் எலிகள் குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

    September 4, 2025
    தேசியம்

    காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டை

    September 4, 2025
    தேசியம்

    ‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து

    September 4, 2025
    தேசியம்

    திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழவைத்த நிகழ்வு: அன்புமணி கண்டனம்

    September 4, 2025
    தேசியம்

    விசாகப்பட்டினத்தில் 55 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறப்பு

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீங்கள் மரணத்திற்கு அருகில் இருக்கும்போது உங்கள் உணர்வுக்கு என்ன நடக்கும்: அறிவியல் விளக்கப்பட்டது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள லண்டன் பயணத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன விரிவாக்கம் குறித்து ஆலோசனை
    • உங்கள் பல் துலக்குதல், துண்டு, ஒப்பனை கடற்பாசி மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு அத்தியாவசியங்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
    • ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.