Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உத்தர பிரதேசத்தில் ஒருவர் பெயரில் 6 மாவட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து மோசடி: தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலை
    தேசியம்

    உத்தர பிரதேசத்தில் ஒருவர் பெயரில் 6 மாவட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து மோசடி: தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலை

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உத்தர பிரதேசத்தில் ஒருவர் பெயரில் 6 மாவட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து மோசடி: தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட னர். அப்​போது உ.பி.​யில் அகிலேஷ் யாதவ் தலை​மையி​லான சமாஜ்​வாதி அரசு பொறுப்​பில் இருந்​தது.

    எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களில் ஆக்​ராவை சேர்ந்த அர்​பித் சிங் என்​பவரும் ஒரு​வர். நியமன பட்​டியலில் 80-வது இடத்​தில் அவர் இடம்​பெற்​றிருந்​தார். அதன்​பிறகு சில நாட்​களில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் மற்ற மாவட்​டங்​களில் உள்ள சுகா​தார மையங்​களில் எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களாகப் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

    அவர்​கள் அனை​வரும் ஆக்​ராவை சேர்ந்த உண்​மை​யான அர்​பித் சிங்​கின் நியமன கடிதம் மற்​றும் ஆதார் உட்பட அனைத்து ஆவணங்​களை​யும் போலி​யாக தயாரித்து அரசுப் பணி​யில் சேர்ந்​தது தற்​போது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

    இதுகுறித்து பாரா மெடிக்​கல் துறை இயக்​குந​ராக உள்ள டாக்​டர் ரஞ்​சனா கரே, வசிர்​கஞ்ச் போலீஸ் நிலை​யத்​தில் நேற்று புகார் அளித்​தார். அதில் பல்​ராம்​பூர், பரூக்​கா​பாத், பண்​டா, ராம்​பூர், அம்​ரோஹா, ஷம்லி ஆகிய மாவட்​டங்​களில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் போலி​யாக வேலை செய்​துள்​ளனர். அதன் மூலம் கடந்த 9 ஆண்​டு​களாக அரசு சம்​பளம் பெற்​றுள்​ளனர்.

    இது​வரை ரூ.4.5 கோடி அரசு பணம் அவர்​களுக்கு சம்​பள​மாக வழங்​கப்​பட்​டுள்​ளது. மோசடி செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று டாக்​டர் ரஞ்​சனா கரே தெரி​வித்​துள்​ளார்.

    அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து மோசடி கும்​பலை தீவிர​மாக தேடி வருகின்றனர். இதற்​கிடை​யில், ஆள் மாறாட்​டம் செய்து மோசடி​யில் ஈடு​பட்ட கும்​பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உ.பி. துணை முதல்​வரும் சுகா​தா​ரத் துறை அமைச்​சரு​மான பிரஜேஷ் பதக்கை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

    உ.பி.​யில் அரசுப் பணி​யில் இருப்​பவர்​கள் பற்​றிய விவரங்​கள் சரி பார்க்​கும் பணி நடை​பெறுகிறது. அதற்​காக, ‘மானவ் சம்​ப​டா’ என்ற பெயரில் ஆன்​லைன் போர்ட்​டல் தொடங்​கப்​பட்​டது. இந்த போர்ட்​டல் மூலம் அரசு ஊழியர்​களை சரி பார்க்​கும் போது, 6 மாவட்​டங்​களில் ஊழியரின் பெயர், தந்தை பெயர், பிறந்த நாள் எல்​லாம் ஒன்​றாக இருந்​தது அம்​பல​மாகி உள்​ளது. அவர்​கள் கடந்த 9 ஆண்​டு​களாக மாதம் ரூ.69,595 சம்​பளம் பெற்று வந்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மைசூரு தசரா விழாவை பானு முஸ்தாக் தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

    September 16, 2025
    தேசியம்

    பசு அரசியல்: பிஹார் தேர்தலில் போட்டியிடும் சங்கராச்சாரியார் கட்சி!

    September 16, 2025
    தேசியம்

    பெங்களூரு: வாகன ஓட்டிகளிடம் ரூ.106 கோடி அபராதம் வசூல்

    September 16, 2025
    தேசியம்

    பிஹாரில் ரூ.36,000 கோடியில் நலத்திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

    September 16, 2025
    தேசியம்

    ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

    September 16, 2025
    தேசியம்

    மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் திறன் உள்ளது: சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கொள்கை என்ற புகாருக்கு கட்கரி மறுப்பு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சார்லி கிர்க்கின் ‘ரகசிய சகோதரி’ யார்? 29 வயதான ‘ஆச்சரியமான’ அரசியல் கருத்துக்களுடன் சந்திக்கவும்-டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்பேஸ்எக்ஸ் நீதிமன்ற ஒப்புதல் வென்றது: தெற்கு டெக்சாஸில் சுற்றுச்சூழல் கவலைகள் இருந்தபோதிலும் ஸ்டார்ஷிப் ஏவுதல்கள் தொடர அமெரிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சார்லி கிர்க் ஷூட்டிங்: கரேன் அட்டியா யார்? சார்லி கிர்க்கின் படுகொலை குறித்த கருத்துகளுக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் நீக்கப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மைசூரு தசரா விழாவை பானு முஸ்தாக் தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி
    • தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க முடியுமா? – கல்வி வாரியம் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.