Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உத்தராகண்ட் மேகவெடிப்பு: இதுவரை 190 பேர் மீட்பு, 100+ பேரை தேடும் பணி தீவிரம்
    தேசியம்

    உத்தராகண்ட் மேகவெடிப்பு: இதுவரை 190 பேர் மீட்பு, 100+ பேரை தேடும் பணி தீவிரம்

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உத்தராகண்ட் மேகவெடிப்பு: இதுவரை 190 பேர் மீட்பு, 100+ பேரை தேடும் பணி தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தாராலி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தரளி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 190 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தரளியில் பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. தரளியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம், ஐடிபிபி, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில், 150 பேர் கொண்ட ராணுவக் குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

    சாலைகள் சேதம்: உத்தரகாசியில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக, பர்த்வாரி, லிஞ்சிகாட் மற்றும் கங்க்ரானி அருகே உள்ள முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. தரளியில் உள்ள ஒரு சிவில் ஹெலிகாப்டர் தளமும் மண் சரிவு காரணமாக செயல்படவில்லை. “சவாலான நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுக்கு உதவ உறுதியாக உள்ளோம்” என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சிவப்பு எச்சரிக்கை: உத்தரகாசியில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாசி, தெஹ்ரி, ருத்ரபிரயாக், சாமோலி, பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    190 பேர் மீட்பு: உத்தராகண்ட் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 190 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். உத்தரகாசியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், “தரளி முற்றிலும் பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளது. நான் அங்கு சென்று அனைத்து மக்களையும் சந்தித்தேன். மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் தொடர்ந்து ஆறு முறை வந்தது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். மண் சகதி மீண்டும் மீண்டும் வந்ததால், அங்குள்ள அனைத்தும் பேரழிவிற்கு உள்ளாயின” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்

    August 7, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

    August 6, 2025
    தேசியம்

    டெல்லி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஐபோன் 16 புரோ – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

    August 6, 2025
    தேசியம்

    அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயருக்கு தடை இல்லை: சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

    August 6, 2025
    தேசியம்

    நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜு

    August 6, 2025
    தேசியம்

    Bihar SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும்: கார்கே திட்டவட்டம்

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார் ட்ரம்ப் 
    • பாஜக குறித்து யாரும் தவறாகப் பேசினால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: நயினார் நாகேந்திரன்
    • கீமோ இல்லை, கதிர்வீச்சு இல்லை: நிலை 4 எலும்பு புற்றுநோயால் கண்டறியப்பட்ட இந்த மனிதர் நோயை வெறும் 4 மாற்றங்களுடன் மாற்றியமைத்தார்
    • “நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்
    • ‘காத்தி’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கிய அனுஷ்கா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.