Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?
    தேசியம்

    உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?

    adminBy adminJune 18, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல் துறையுடன் தொடர்புடையவர்களும் ஈரானில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அங்கு சிக்கியிருந்த இந்தியர்களில் ஆயிரக்கணக்காக மாணவர்களும் இருந்தனர். கடந்த 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கும் இடையில் சுமார் 22,500 இந்தியர்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். இதற்காக, ‘ஆபரேஷன் கங்கா’ எனும் பெயரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

    ‘ஆபரேஷன் கங்கா’ மூலம் மொத்தம் 90 விமானங்களில் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவற்றில் 14 விமானங்கள் அண்டை நாடுகளில் இருந்து இந்திய விமானப் படையால் இயக்கப்பட்டன. இதற்காக ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா அதிகமான ஒத்துழைப்பைப் பெற்றது. இது ‘ஆபரேஷன் கங்கா’வின் செயல்பாடுகளை எளிதாக்கியது. இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்ட போலந்து வழியாக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை வெளியேற்ற முடிந்தது. இதற்காக பிரதமர் மோடி தனது பயணத்தின் போது போலந்தையும் பாராட்டினார்.

    ஆனால், ஈரானில் இருந்து அதுபோன்ற பெரிய அளவிலான வெளியேற்றம் அவ்வளவு எளிதானது அல்ல எனக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு, வான்வழிகளில் தடைகள், ராஜதந்திர உணர்திறன் மற்றும் அச்சுறுத்தல் உணர்வு ஆகியவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. ஈரானில் இருந்து எந்தவொரு வெளியேற்ற நடவடிக்கைக்கும் இந்திய அரசு இன்னும் எந்தப் பெயரையும் சூட்டவில்லை. ஈரானில் இருந்து வானில் பறக்க, புவியியல் மற்றும் ராஜதந்திர தடைகள் உள்ளன.

    மேலும், உக்ரைனுடன் ஒப்பிட்டால், ஈரானில் இருந்து திரும்பி வர விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைவு. இத்துடன் இந்தியர்களுக்கான பாதுகாப்பான வழிகள் மற்றும் அவர்களது விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த வளங்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

    ஆனால், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களானது ஈரானின் பல பகுதிகளில் பரவியுள்ளன. ஈரானில் இருந்து வெளியேறும் அனைத்து பாதைகளும் ஆபத்துகளால் நிறைந்துள்ளன. ஈரானில் சாலை மற்றும் ரயில் வழித்தடங்களும் பாதுகாப்பான, நிச்சயமான நிலையிலும் இல்லை. ஈரான் நகரங்களில் பல சாலைகளும் ராணுவப் பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த நிலை ஈரானை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானவை அல்ல.

    ஈரானின் கிழக்கு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவுக்கு பிரச்சினையாக உள்ளன. இந்தியாவுக்கான தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் தடைகளால் தரைவழியாக வெளியேற்றுவதும் சாத்தியமில்லை. இந்தியா – ஆப்கானிஸ்தான் உறவுகள் ஓரளவு மேம்பட்டுள்ளன. இருப்பினும், அங்கிருந்து வெளியேற்றுவதற்கான தளவாடங்களும் கடுமையான பிரச்சினைகளாகவே உள்ளன.

    ஆப்கானிஸ்தானின் விமானப் பாதைகளிலும் இந்தியாவுக்கு விமானங்கள் பறக்க முடியாத நிலை. ஏனெனில், விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்ல வேண்டியிருக்கும். இது, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈரானில் இந்தியாவின் வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

    முதல் கட்டமாக, சுமார் 110 பேர் ஈரான் – ஆர்மீனியா எல்லையைக் கடந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். இது தவிர, 600 முதல் 700 பேர் தெஹ்ரானில் இருந்து அந்நாட்டின் புனித நகரமான கோமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களால் ஈரானின் அரக், கோர்ராமாபாத், இஹான், தப்ரிஸ் மற்றும் கெர்மன்ஷா போன்ற நகரங்களுக்குச் செல்ல முடியாது. ஏனெனில், இந்த நகரங்கள் அணுசக்தி மற்றும் ராணுவ வசதிகளுக்கு அருகில் உள்ளன.

    ஆர்மீனியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் நில எல்லைகளை ஈரான் பகிர்ந்து கொள்கிறது. இவற்றில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெளியேற்றத்துக்கு உகந்தவை அல்ல.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் உருவான இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது, பாகிஸ்தானை அஜர்பைஜான் ஆதரித்தது. எனவே, துர்க்மெனிஸ்தான் தற்போது இந்தியர்கள் வெளியேறும் ஒரு வழியாக உள்ளது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்

    June 30, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    June 30, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா

    June 30, 2025
    தேசியம்

    ‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

    June 30, 2025
    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முதல் 10 பானங்களை வெளிப்படுத்துகிறார் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: கழுகு அல்லது மலை? நீங்கள் முதலில் பார்ப்பது கவர்ந்திழுக்கும் அல்லது கடின உழைப்பாளி என்றால் முதலில் வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்
    • தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.