Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
    தேசியம்

    இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘‘க​னமழை, நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரிடர்​கள், நமது நாட்டை சோதிக்​கின்​றன. இந்த இக்​கட்​டான நேரத்​தலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 சாதனை​களைப் படைத்​துள்​ளது’’ என்று மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

    பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 125-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது:

    பரு​வ​மழை​யின் இந்த வேளை​யில் இயற்​கைப் பேரிடர்​கள் நமது நாட்டை சோதித்து வரு​கின்​றன. கடந்த சில வாரங்​களில் கனமழை, வெள்​ளம், நிலச்​சரிவு ஆகிய​வற்​றின் பாதிப்பை பார்த்​தோம். சில இடங்​களில் வீடு​கள் மண்​ணில் புதைந்​தன. சில இடங்​களில் பயிர்​கள் நீரில் மூழ்​கின. பல குடும்​பங்​கள் நிலச்​சரி​வால் மண்​ணில் புதைந்​துள்​ளன. பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன, சாலைகள் காணா​மல் போயின, மக்​களின் வாழ்க்கை பெரும் சங்​கடத்​தில் சிக்​கியது. இந்​தச் சங்​கடங்​கள் இந்​தி​யர்​கள் அனை​வரை​யும் சோகத்​தில் ஆழ்த்​தி​யது. தங்​களு​டைய உறவு​களை இழந்த குடும்​பங்​களின் துக்​கம் நம் அனை​வரின் துக்​கம்.

    அதேவேளை​யில், கனமழை, வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட இடங்​களில் தேசிய பேரிடர் மீட்​புப் படை, மாநில பேரிடர் மீட்​புப் படை,பிற பாது​காப்​புப் படை வீரர்​கள், உள்​ளூர் மக்​கள், சமூக ஆர்​வலர்​கள், மருத்​து​வர்​கள், நிர்​வாகத்​தினர் என அனைத்து தரப்​பினரும் இரவு பகல் பார்க்​காமல் மீட்​பு, நிவாரணப் பணி​களில் பாடு​பட்​டனர். அவர்​கள் அனை​வருக்​கும் மனமார்ந்த நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன்.

    தெர்​மல் கேம​ராக்​கள், மண்​ணுக்​குள் புதைந்​தவர்​களை கண்​டறி​யும் கருவி​கள், மோப்ப நாய்​கள் மற்​றும் ட்ரோன்​கள் என பல நவீன கருவி​களின் உதவியோடு உடனுக்​குடன் நிவாரண பணி​களில் ஈடு​பட்​டனர். ஹெலி​காப்​டர்​கள் மூலம் நிவாரணப் பொருட்​கள் கொண்டு சேர்க்​கப்​பட்​டன, காயமடைந்​தவர்​கள் வான்​வழி கொண்டு செல்​லப்​பட்​டார்​கள். பேரிடர் நேரத்​தில் ராணுவத்​தின் உதவி​கள் மிகப்​பெரி​தாக இருந்​தது.

    கனமழை, வெள்​ளம், நிலச்​சரிவுக்கு இடை​யிலும், ஜம்மு கஷ்மீரில் 2 சாதனை​கள் நிகழ்ந்​துள்​ளன. முதலா​வது ஜம்மு கஷ்மீரின் புல்​வா​மா​வில் முதல் பகல் – இரவு கிரிக்​கெட் போட்டி நடை​பெற்​றுள்​ளது.​ முன்​பெல்​லாம் இது​போன்ற விளை​யாட்​டுக்கு சாத்​தி​யமில்​லை. இப்​போது எனது நாடு மாறி வரு​கிறது. புல்​வா​மா​வில் நடை​பெற்ற கிரிக்​கெட் போட்​டி​யில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர்.

    இரண்​டாவது கேலோ இந்​தியா நீர் விளை​யாட்​டு​கள் நகரின் தால் ஏரி​யில் நடை​பெற்​றது. இந்த விளை​யாட்​டு​களில் நாடு முழு​வதும் இருந்து 800-க்​கும் அதி​க​மான விளை​யாட்டு வீரர்​கள் பங்​கெடுத்​தனர். ஆண் வீரர்​களுக்கு இணை​யாக இதில் பெண் வீராங்​க​னை​களும் கலந்து கொண்​டனர்​ .அவர்​களுக்கு என் பாராட்​டு​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

    அடுத்த முறை நாம் சந்​திக்​கும்​ வேளை​யிலே, மேலும்​ புதி​ய விஷ​யங்​களோடு சந்​திப்​போம்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி உரை​யாற்​றி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்

    September 3, 2025
    தேசியம்

    “யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து

    September 3, 2025
    தேசியம்

    விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை

    September 3, 2025
    தேசியம்

    அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா

    September 3, 2025
    தேசியம்

    பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    September 3, 2025
    தேசியம்

    ​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
    • இயற்கையாகவே வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை எவ்வாறு அகற்றுவது: வல்லுநர்கள் காரணங்கள், தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இதய ஆரோக்கியத்திலிருந்து நீரிழிவு ஆபத்து வரை: ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி கழுத்து அளவு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.