Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இமாச்சலில் இரண்டரை ஆண்டுகளில் 1,200 அரசுப் பள்ளிகள் மூடல் – காரணம் என்ன?
    தேசியம்

    இமாச்சலில் இரண்டரை ஆண்டுகளில் 1,200 அரசுப் பள்ளிகள் மூடல் – காரணம் என்ன?

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இமாச்சலில் இரண்டரை ஆண்டுகளில் 1,200 அரசுப் பள்ளிகள் மூடல் – காரணம் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிம்லா: கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார்.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூடப்பட்ட 1,200 பள்ளிகளில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்ததால் மூடப்பட்டன. மற்றவை குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக இணைக்கப்பட்டன. மாநில அரசின் கல்வித் துறையை வலுப்படுத்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பள்ளிகளை இணைப்பது மற்றும் மறுசீரமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 25-க்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருந்தால், அந்த பள்ளிகளை மற்றொரு பள்ளியுடன் இணைப்பதற்கான அளவுகோல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. தொடக்கக் கல்வித் துறையில் 3,900 பணியிடங்கள் உட்பட 15,000 ஆசிரியர் பணியிடங்களை அரசு அனுமதித்துள்ளது. இமாச்சலப் பிரதேச ராஜ்ய சயான் ஆயோக் மூலம் கூடுதலாக 3,100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 6,200 நர்சரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

    முந்தைய பாஜக ஆட்சியின்போது கல்வித் துறையில் ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது, ஆனால், தற்போதைய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலம் கல்வித் துறையை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக முதல்வர்களின் சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. உயர் கல்வித் துறையில் 483 உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் 700 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முந்தைய பாஜக அரசின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 511 விரிவுரையாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜனவரி 2025-இல் வெளியிடப்பட்ட ‘ஆண்டு கல்வி நிலை அறிக்கை’யின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் நாட்டிலேயே சிறந்ததாக இருந்தது. இந்த கணக்கெடுப்பின் பெரும்பாலான அளவுருக்களின்படி, இமாச்சலப் பிரதேசம் நாடு தழுவிய அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

    July 5, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு: ரூ.700 கோடிக்கு உள்கட்டமைப்புகள் சேதம்

    July 5, 2025
    தேசியம்

    பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்: இபிஎஸ் அறிவிப்பு
    • புற்றுநோய்க்கு பிந்தைய உடற்பயிற்சி திட்டம் மரணம் மற்றும் மறுநிகழ்வு விகிதங்களைக் குறைக்கிறது, ஒரு ஆய்வின்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி அடக்கம் தவறானது: 166 பேரின் எச்சங்கள் மற்றும் கஞ்சா விதைகள் பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு
    • அதிமுக சுற்றுப்பயணம்: லோகோ, கட்சிப் பாடலை வெளியிட்டார் இபிஎஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.