Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே” – சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்
    தேசியம்

    “இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே” – சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே” – சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தந்ததை நிறுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது: “இப்போதெல்லாம், ஊடகங்களில் தண்ணீர் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. முன்பு, இந்தியாவின்அடிப்படை உரிமையாக இருந்த தண்ணீர் கூட நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இப்போது, ​​இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் நலனுக்காக பயன்படப் போகிறது. அது இந்தியாவின் நலனுக்காகப் பாதுகாக்கப்படும். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

    ஒரு காலத்தில், எந்தவொரு அத்தியாவசிய நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, உலகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தனர். தங்களுக்கு வாக்கு கிடைக்குமா, தங்கள் நிலை பாதுகாப்பாக இருக்குமா என்று அவர்கள் சிந்தித்தார்கள். இந்தக் காரணங்களால், பெரிய சீர்திருத்தங்கள் தாமதமாகின. எந்த நாடும் இப்படி முன்னேற முடியாது. நாம் தேசத்துக்கு முன்னுரிமை கொடுக்கும்போதுதான் முன்னேறும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    பின்னணி என்ன? – கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போதே சிந்தி நதி நீர் பிரச்சினை எழுந்தது. அப்போது நாடு நாடுகளுக்கும் இடையே தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1948 மார்ச் 31-ல் ஒப்பந்தம் காலாவதியானது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்தது. சுமார் 17 லட்சம் ஏக்கர் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.

    இதன்பிறகு உலக வங்கியின் சமரசத்தின்பேரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமார் 10 ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்படி கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இரு நாடுகளிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் நேரு, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்

    August 27, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

    August 27, 2025
    தேசியம்

    வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

    August 27, 2025
    தேசியம்

    பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

    August 27, 2025
    தேசியம்

    கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

    August 27, 2025
    தேசியம்

    இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளையத்திற்கான வைரம் இந்தியாவிலிருந்து இருக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பயனர் கூறுகிறார்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்
    • யார் இந்த அபர்ணா சென்? – கமலின் ‘மனம் கவர்ந்த’ வங்க மொழி சினிமா ஆளுமை!
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துரிதமாக செயல்படவில்லை: கே.பாலபாரதி குற்றச்சாட்டு
    • மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்: புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் கண்டறியப்பட்டார்: 5 மிக ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் தவறவிடக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.