Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா
    தேசியம்

    “இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: “ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பஹல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

    மத அடிப்படையிலான இரு நாட்டுக் கொள்கையை 1947-லேயே நிராகரித்தவர்கள் தான் ஜம்மு – காஷ்மீர் மக்கள். அதை இப்போதும் அவர்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) தான் நிகழ்த்தியது மனிதாபிமான படுகொலை என்பதையே உணர்ந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் நாங்கள் (முஸ்லிம்கள்) பாகிஸ்தானுடன் சென்றுவிடுவோம் என அவர்கள் எண்ணுவார்களேயானால் அது நடக்காது என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். 1947-லேயே போகாதவர்கள், இப்போது ஏன் அவர்களுடன் செல்லப் போகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் எல்லோருமே சமம் தான். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.” என்று கூறியுள்ளார்.

    நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கற்பனை செய்யமுடியாத பதிலடியை சந்திப்பார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உமர் அப்துல்லா மிக உருக்கமாகப் பேசியிருந்தார்.

    இந்தக் கடினமான சூழலில் மத்திய அரசின் முடிவுக்கு துணை நிற்கப்போவதாகவும், அதேபோல் இந்த நேரத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து போன்ற விவகாரங்களை எழுப்பப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், பஹல்காம் விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லாவும் மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?

    September 21, 2025
    தேசியம்

    மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் ‘ஆயில் குமார்’

    September 21, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து

    September 21, 2025
    தேசியம்

    ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூரிய கிரகணம் 2025: சூரிய கிரகணத்தின் போது திடீர் இருளுக்கு விலங்குகள் எவ்வாறு செயல்படுகின்றன
    • பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு – பாஜக சரிபாதி தொகுதிகளில் போட்டி?
    • ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை
    • தொடர்ந்து தண்ணீர் குடிப்பது ஆனால் இன்னும் நீரிழப்புடன் உணர்கிறீர்களா? இந்த முக்கியமான நீரேற்றம் உறுப்பை அவர்கள் காணவில்லை என்று பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர்டில் பீதி: K 100K H -1B விசா கட்டணம் இந்திய பயணிகளிடையே விமான குழப்பத்தைத் தூண்டுகிறது – வாட்ச் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.