Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா
    தேசியம்

    “இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இனியொரு ‘பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவிலான பதிலடியே மக்களின் எதிர்பார்ப்பு” – ஃபரூக் அப்துல்லா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: “ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பஹல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

    மத அடிப்படையிலான இரு நாட்டுக் கொள்கையை 1947-லேயே நிராகரித்தவர்கள் தான் ஜம்மு – காஷ்மீர் மக்கள். அதை இப்போதும் அவர்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) தான் நிகழ்த்தியது மனிதாபிமான படுகொலை என்பதையே உணர்ந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் நாங்கள் (முஸ்லிம்கள்) பாகிஸ்தானுடன் சென்றுவிடுவோம் என அவர்கள் எண்ணுவார்களேயானால் அது நடக்காது என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். 1947-லேயே போகாதவர்கள், இப்போது ஏன் அவர்களுடன் செல்லப் போகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் எல்லோருமே சமம் தான். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.” என்று கூறியுள்ளார்.

    நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கற்பனை செய்யமுடியாத பதிலடியை சந்திப்பார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உமர் அப்துல்லா மிக உருக்கமாகப் பேசியிருந்தார்.

    இந்தக் கடினமான சூழலில் மத்திய அரசின் முடிவுக்கு துணை நிற்கப்போவதாகவும், அதேபோல் இந்த நேரத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து போன்ற விவகாரங்களை எழுப்பப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், பஹல்காம் விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லாவும் மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “உங்கள் தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன” – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

    June 29, 2025
    தேசியம்

    மேற்கு வங்க மாணவிக்கு பாலியல் கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு; 4 பேர் கைது

    June 29, 2025
    தேசியம்

    புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

    June 29, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

    June 29, 2025
    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு
    • விஞ்ஞானத்தின் ஆதரவுடன், இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தக்கூடிய 5 சிறிய பழக்கவழக்கங்கள்
    • தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்
    • தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு
    • முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.