Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது” – அமித் ஷா
    தேசியம்

    “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது” – அமித் ஷா

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது” – அமித் ஷா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அமித் ஷா, “இன்று, இந்த பிரம்மாண்டமான மண்டபத்தில், நமது அலுவல் மொழியை விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் உள்ள இந்தி மற்றும் இந்திய மொழிகளைப் போற்றும் அனைவருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் 1975 முதல் 2025 வரையிலான 50 ஆண்டுகால பயணத்தில், இந்தியாவின் சுயமரியாதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளின் வரலாற்றில் அலுவல் மொழியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

    எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை; எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது, ஆனால் நம் மொழியைப் போற்ற வேண்டும். நம் மொழியைப் பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இருக்க வேண்டும்.

    அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளாத வரை, தனது மொழியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட முடியாது.

    மொழி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது தேசத்தின் ஆன்மா. மொழி இல்லாமல் நமது வேர்கள், மரபுகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் முன்னேற முடியாது. மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். இந்தி மற்றும் இந்திய மொழிகள் இணைந்து நமது சுயமரியாதை திட்டத்தை அதன் இறுதி இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

    ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். காசி-தமிழ் சங்கமம், காசி-தெலுங்கு சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம், ஷாஷ்வத் மிதிலா மஹோத்ஸவ் மற்றும் பாஷா சங்கம் ஆகியவை நடத்தப்பட்டன. இவை அனைத்தும் ஒரு சிறந்த தொடக்கத்தை உருவாக்கி, நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான தளத்தை வழங்கியுள்ளன.

    JEE, NEET, CUET ஆகிய போட்டித் தேர்வுகள் இப்போது 13 மொழிகளில் எழுதப்படுகின்றன. இதற்கு முன், CAPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியும். நாங்கள் அதனை 13 மொழிகளில் எழுத அனுமதித்தோம். இன்று 95% தேர்வாளர்கள் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.

    கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், இந்தியாவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நமது மொழிகள் இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறுவதை உறுதி செய்வோம். இதற்காக, அலுவல் மொழித் துறை செயல்படும்.

    பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்படும் அடித்தளம் 2047-ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும். அதற்கான வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்துவோம். அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்போம்.

    மத்திய அரசாங்கத்தில் மட்டுமல்ல, மாநில அரசாங்கத்திலும் அரசாங்கப் பணிகளில் இந்திய மொழிகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். இதற்காக, நாங்கள் மாநிலங்களைத் தொடர்புகொண்டு, அவர்களை சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைப்போம்” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    August 27, 2025
    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    August 27, 2025
    தேசியம்

    “50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

    August 26, 2025
    தேசியம்

    ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    தேசியம்

    கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மறைக்கப்பட்ட ஆபத்து: மிகவும் கண்டிப்பான உணவு அட்டவணைகளுக்கு எதிராக நிபுணர் எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.சி.எம்.ஆர் ஆய்வு இந்திய பெண்களிடையே முதல் இரண்டு புற்றுநோய்களை வெளிப்படுத்துகிறது; முன்கூட்டியே கண்டறிதல் இறப்புகளைத் தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டீன் புற்றுநோய் எச்சரிக்கை: 19 வயதான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி மறைக்கப்பட்ட கட்டி வெளிப்படுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் தாவரங்களை பாதுகாக்கும் மற்றும் தோட்ட பூச்சிகளைக் குறைக்கும் 5 அத்தியாவசிய பூச்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.