Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
    தேசியம்

    இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது.

    ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, ஒரு பெண் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் (டிஎப்ஆர்) 1.9 ஆக குறைந்துள்ளது. 1970-களில் 5 ஆக இருந்த இது படிப்படியாக குறைந்து வருகிறது. கல்வி அறிவு அதிகரித்தது மற்றும் கருவுறுதல் தொடர்பான சுகாதார வசதிகள் அதிகரித்ததுமே இதற்குக் காரணம்.

    இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தாலும் 0 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 24%, 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் 17%, 10 முதல் 24 வயதுக்குட்பட்டோர் 26% உள்ளனர். நாட்டின் 68% மக்கள் வேலை செய்யும் வயது (15 – 64) உடையவர்களாக உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெறும் 7% ஆக உள்ளது. ஆனால், இது வரும் காலத்தில் அதிகரிக்கும். அடுத்த 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக அதிகரிக்கும். அதன் பிறகு மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

    பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் கருத்தடை முறைகளை பயன்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் தேவையற்ற வகையில் கருவுறுவதே இதற்குக் காரணம். அதேநேரம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2%-க்கும் குறைவாக உள்ளது. குறிப்பாக இம்மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்து படித்த பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.

    உலகம் முழுவதும் இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரிடம் யுஎன்எப்பிஏ சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் கருவுறுவதாக 36% பேர் தெரிவித்தனர். அதேநேரம், அதிகமாக அல்லது குறைவாக குழந்தை பெற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை என 30% பேர் தெரிவித்தனர்.

    குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு உள்ள மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக பொருளாதார வசதி உள்ளது என 10-ல் 4 பேர் தெரிவித்தனர். வேலை பாதுகாப்பின்மை (21%) வீட்டுவசதி இல்லாமை (22%) மற்றும் குழந்தை பராமரிப்பு இல்லாமை (18%) ஆகிய காரணங்களைக் கூறினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 19, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சி.பி.ஆர்.

    August 19, 2025
    தேசியம்

    ‘2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார்’ – மக்களவையில் ஜிதேந்திர சிங் தகவல்

    August 19, 2025
    தேசியம்

    காவிரியில் தமிழகத்துக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு

    August 19, 2025
    தேசியம்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு

    August 19, 2025
    தேசியம்

    உலக சாதனையாக 314 கி.மீ. தூரத்திலேயே பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்திய கேப்டன் அனிமேஷ்

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆட்சிக்கு வந்ததும் 3 தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை: ராகுல் காந்தி எச்சரிக்கை
    • ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது போலீஸில் புகார்
    • ராமதாஸும், அன்புமணியும் அரசியல் நாடகம் போடுகின்றனர்: காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றச்சாட்டு
    • இந்த இந்திய நிறுவனத்தால் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக யு.எஸ்.எஃப்.டி.ஏ எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா எச்சரிக்கை! ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் 1997 QK1 ஆகஸ்ட் 20 அன்று 22,000 மைல் வேகத்தில் பூமியின் நெருக்கமான ஃப்ளைபிக்கு அமைக்கப்பட்டுள்ளது; இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.