Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘இந்திய எல்லையை நோக்கி பாக். ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது’ – விங் கமாண்டர் வியோமிகா சிங்
    தேசியம்

    ‘இந்திய எல்லையை நோக்கி பாக். ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது’ – விங் கமாண்டர் வியோமிகா சிங்

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்திய எல்லையை நோக்கி பாக். ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது’ – விங் கமாண்டர் வியோமிகா சிங்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

    விமானப் படையின் பதில் நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி தனது துருப்புக்களை நகர்த்தி வருகிறது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கம் கொண்ட தாக்குதலை குறிக்கிறது. இந்திய ஆயுதப்படைகள் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளன. அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு, விகிதாச்சார ரீதியாக பதிலளிக்கப்பட்டுள்ளன.

    பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் அதேநேரத்தில், பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப்படைகள் மீண்டும் வலியுறுத்தின. விரைவான மற்றும் துல்லியமான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் அடையாளம் காணப்பட்ட ராணுவ இலக்குகளில் மட்டுமே துல்லிய தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளது. இந்தியாவின் S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத்கர் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் அது கூறுகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது.

    லாகூரில் இருந்து புறப்படும் சிவிலியன் விமானங்களையும், சர்வதேச விமான வழித்தடங்களையும் பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தியது கவலைக்குரிய விஷயம். இத்தகைய தந்திரோபாயங்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை மிகுந்த பொறுமையுடன் செயல்பட கட்டாயப்படுத்தியது. அதே நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்கிறது.” என தெரிவித்தார்.

    பஞ்சாபின் அமிர்தசரஸில், குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பைக்கர் யிஹா III காமிகேஸ் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாகவும், இன்று அதிகாலை 5 மணிக்கு ராணுவ வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பார்மரில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் துண்டுகள் மற்றும் சிதைவுகள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டன.

    இதற்கிடையில், இன்று அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படை தளங்கள் இந்தியத் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்

    July 18, 2025
    தேசியம்

    மிசோரத்தில் இருந்து 3,000 அகதிகள் மியான்மர் திரும்பினர்

    July 18, 2025
    தேசியம்

    பிஹார் மருத்துவமனையில் 5 பேர் கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்து கொலை குற்றவாளியை சுட்டுக் கொன்றது

    July 18, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு துரோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

    July 18, 2025
    தேசியம்

    தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம்: ஜூலை மாதம் முதல் அமல் 

    July 18, 2025
    தேசியம்

    சங்கூர் பாபாவின் மதமாற்றத்தில் முறைகேடு: உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்
    • பள்ளி கல்வித்துறையில் முன்னோடி திட்டங்கள்: தமிழக அரசுக்கு அமெரிக்க குழு பாராட்டு
    • இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
    • பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    • மாரடைப்பு அறிகுறிகள்: மாரடைப்பால் 9 வயது பெண் இறந்துவிடுகிறாள்; குழந்தைகளில் இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள 5 விஷயங்கள் இங்கே

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.