Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் உண்டா? – ராகுல் காந்தி கேள்வி
    தேசியம்

    இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் உண்டா? – ராகுல் காந்தி கேள்வி

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் உண்டா? – ராகுல் காந்தி கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரை தான் நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலை​யில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.

    ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடை​பெற்ற விவாதத்​தின்​போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது எதிர்க்​கட்​சிகள் பாறை போல உறு​தி​யாக நின்று மத்​திய அரசுக்கு ஆதரவை வழங்​கின.

    குறிப்​பாக, இந்த நடவடிக்கை தொடங்​கு​வதற்கு முன்​பாகவே அரசை ஆதரிப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் ஒற்​றுமை​யாக நின்று உறுதியளித்​ததை நினை​வு​கூர விரும்​பு​கிறேன். அதே​நேரம், பஹல்​காமில் பாகிஸ்​தா​னால் திட்​ட​மிடப்​பட்ட மிரு​கத்​தன​மான தாக்குதலுக்கு கண்​டனத்​தை​யும் தெரிவித்தோம்.

    ஆனால், ராணுவ நடவடிக்​கைக்கு முன்பே பாகிஸ்​தான் அரசிடம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது என்​பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்த விவ​காரத்​தில் பல கேள்வி​களை எழுப்புகிறது. போர் தொடங்கும்வரை பாகிஸ்தான் மட்டும்தான் எதிரி என இந்தியா நினைத்தது. ஆனால, போர் தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிந்தது. போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.

    இந்​தி​யா​வில் தீவிர​வாதத்தை கட்​ட​விழ்த்​து​விட்ட பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் உணவருந்​தி​யது பற்றி ட்ரம்​பிடம் பிரதமர் மோடி ஏன் கேள்வி எழுப்​ப​வில்​லை. உலக நாடு​கள் ஏன் அதை கண்​டிக்​க​வில்​லை. இந்​தி​யா​வை​யும், பாகிஸ்​தானை​யும் ஒரே நிலை​யில்​வைத்​து​தான் உலக நாடு​கள் பார்க்​கின்றன. இந்​தி​யா-​பாகிஸ்​தான் போரை தான் மத்​தி​யஸ்​தம் செய்து தடுத்​த​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 29 முறை கூறி​யுள்​ளார்.

    அவர் ஒரு பொய்​யர் என்று கூற இந்​திரா காந்​தி​யைப் போல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்​டா? அப்​படி தைரி​யம் இருந்​தால் பிரதமர் இங்​கிருந்து (நா​டாளு​மன்​றத்​தில்) சொல்​லட்​டும். ராணுவ நடவடிக்​கைகள் உட்பட சீனா வழங்​கிய தகவல்​களின் அடிப்​படை​யில்​தான் பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. மீண்டும் ஒரு​முறை பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​னால் இந்​தியா என்ன செய்யப்​போகிறது?.

    சீனா​வும் பாகிஸ்​தானும் இணைந்​திருப்​பது இந்​தி​யா​வுக்கு மிக​வும் ஆபத்​தானது. தீவிர​வாதத்தை ஊக்​குவிக்​கும் பாகிஸ்​தான் மற்றும் அதற்கு உதவும் சீனா​வின் வெளி​யுறவு கொள்​கை​யில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி அரசு தோல்​வி அடைந்​து​விட்​டது. இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்​ காந்​தி பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

    July 31, 2025
    தேசியம்

    தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல்

    July 31, 2025
    தேசியம்

    ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

    July 31, 2025
    தேசியம்

    இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

    July 31, 2025
    தேசியம்

    ‘சீன குரு’ – ராகுல் காந்தியை கேலி செய்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

    July 30, 2025
    தேசியம்

    நடப்பாண்டில் 9 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
    • சர்க்கரை நன்மைகளை விட்டு வெளியேறுதல்: ஒருவர் 30 நாட்களுக்கு சர்க்கரையை விட்டு வெளியேறும்போது நடக்கும் 5 விஷயங்கள்
    • ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 
    • பழங்கள் மற்றும் காய்கறிகளை பிளாஸ்டிக்கில் மடக்குவதை நிறுத்துங்கள் என்று புதிய ஆய்வு கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இபிஎஸ்ஸின் கோவை பிரச்சாரத்தில் கோட்டை விட்டதா அதிமுக? 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.