Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்
    தேசியம்

    “இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

    புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம் என்றும் நான் சொன்னேன். போரில், பின்னடைவுகள் இருந்தாலும், நீங்கள் உங்கள் மன உறுதியைப் பராமரிக்க வேண்டும். இழப்புகள் முக்கியமல்ல, ஆனால் விளைவுகள் முக்கியம். போர் என்று வரும்போது, அதனுடன் அரசியல் உட்பட பல்வேறு கூறுகள் இணைந்தே வரும். ஆபரேஷன் சிந்தூரிலும், போரும் அரசியலும் இணைந்தே இருந்தன.

    பஹல்காம் தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் விஷத்தை கக்கினார். இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் அணுகுமுறையே இதற்குக் காரணம். பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்டது ஆழமான கொடுமை.

    பாகிஸ்தானில் இருந்து அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாததத்தின் மூலம் இந்தியாவை பிணைக் கைதியாக அந்த நாடு வைத்திருக்க முடியாது என்பதே ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியில் இருந்த சிந்தனை. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் நிழலில் இந்தியா வாழப் போவதில்லை. பாகிஸ்தான் இலக்குகள் மீதான இந்திய ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் மிகவும் துல்லியமானவை. எந்த அளவுக்கு துல்லியம் என்றால், சில இலக்குகள் இரண்டு மீட்டர் எனும் மிக குறுகிய அளவுக்குள் இருந்தன.

    மே 10-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் தொடர் தாக்குதல்களை தொடங்க பாகிஸ்தான் திட்டமிட்டது. அந்த தாக்குதல் தொடங்கப்பட்ட 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைக்க வேண்டும் என்பது அதன் இலக்காக இருந்தது. ஆனால், அது சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மே 10 அன்று இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் முடிவு செய்தது. அதற்குக் காரணம், ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் அது மேலும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததே. 48 மணி நேரம் தொடரும் என்று நினைத்த பாகிஸ்தானின் நடவடிக்கை சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினர்.

    பேச்சுவார்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான கோரிக்கை பாகிஸ்தானிடமிருந்து வந்தபோது, ​​நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். இந்த நடவடிக்கையின் மூலம் நாம் நமது வரையறையை உயர்த்தியுள்ளோம். பயங்கரவாதத்தை தண்ணீருடன் (சிந்து நதி நீர் ஒப்பந்தம்) இணைத்துள்ளோம், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புதிய ராணுவ நடவடிக்கையை நாங்கள் வரைந்துள்ளோம்” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

    July 31, 2025
    தேசியம்

    Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

    July 31, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

    July 31, 2025
    தேசியம்

    இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

    July 31, 2025
    தேசியம்

    “தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

    July 31, 2025
    தேசியம்

    சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!
    • ஷேக்ஸ்பேரின் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது: இங்கே 10 உண்மைகள் உள்ளன
    • “நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
    • பொதுவான கவலைக் கோளாறு அறிகுறிகள்: இது கவலையா அல்லது பொதுவான கவலைக் கோளாறு? முன்னணி உளவியலாளர் புறக்கணிக்கக் கூடாத 6 அறிகுறிகளை பட்டியலிடுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை கட்ட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.