Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘இது பொறுப்பற்ற செயல்’ – அகமதாபாத் விமான விபத்து குறித்த அமெரிக்க ஊடக செய்திக்கு ஏஏஐபி எதிர்வினை
    தேசியம்

    ‘இது பொறுப்பற்ற செயல்’ – அகமதாபாத் விமான விபத்து குறித்த அமெரிக்க ஊடக செய்திக்கு ஏஏஐபி எதிர்வினை

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இது பொறுப்பற்ற செயல்’ – அகமதாபாத் விமான விபத்து குறித்த அமெரிக்க ஊடக செய்திக்கு ஏஏஐபி எதிர்வினை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை வரும் வரை நிதானம் காக்குமாறு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்திக்கு ஏஏஐபி எதிர்வினையாற்றியுள்ளது.

    இது தொடர்பாக விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு (ஏஏஐபி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தனது விசாரணையை விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 2012-ல் இருந்து 92 விபத்துக்கள் மற்றும் 111 கடுமையான சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளது. இதன்மூலம் ஏஏஐபி குறைபாடற்ற சாதனையை படைத்துள்ளது.

    இதேபோல், சமீபத்திய விமான விபத்துக்களில் மிகவும் மோசமானதான அகமதாபாத் விமான விபத்து குறித்தும் ஏஏஐபி, விதிகளுக்கு உட்பட்டும் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தொழில்முறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விமான விபத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இந்திய விமானத் துறையின் பாதுகாப்பு முறைக்கு எதிராக பொதுமக்களின் கவலையை அல்லது கோபத்தைத் தூண்டுவதற்கான நேரம் இதுவல்ல. குறிப்பாக, உண்மையற்ற கருத்துகளின் அடிப்படையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.

    இந்த விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் வேதனையை உணர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். உண்மையற்ற கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் சில சர்வதேச ஊடகங்கள், மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயல்கின்றன என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இத்தகைய செயல்கள் பொறுப்பற்றவை.

    முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில் கதைகளை உருவாக்குவது புலனாய்வு செயல்முறையை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்பதால், இதை தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    ஏஏஐபி-யின் முதற்கட்ட அறிக்கை என்பது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக மட்டுமே. முதற்கட்ட அறிக்கையை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், திட்டவட்டமான முடிவுக்கு வருவது சரியல்ல. ஏஏஐபியின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. விபத்துக்கான காரணம் என்ன, இதுபோன்ற விபத்து மீண்டும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் வெளிவரும்.

    எனவே, விசாரணை முழுமையாக நிறைவடைந்து இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு ஏஏஐபி அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்தும், பொதுமக்களின் நலன் சார்ந்தும் வெளியிட வேண்டியவை இருப்பின் அவற்றை ஏஏஐபி வெளியிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமான விபத்துக்கு எரிபொருள் சப்ளை குறைந்ததே காரணம் என்றும், எரிபொருள் சப்ளை குறைந்ததற்கு, அதற்கான சுவிட்ச் ஆஃப் மோடில் இருந்ததே காரணம் என்றும் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி, விமானிதான் கவனக்குறைவாக சுவிட்சை ஆஃப் செய்திருப்பார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட நிலையில், ஏஏஐபி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்

    September 16, 2025
    தேசியம்

    ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

    September 15, 2025
    தேசியம்

    கேரளாவில் அமீபா தொற்றுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு; பாதிப்பு 67 ஆக அதிகரிப்பு

    September 15, 2025
    தேசியம்

    ‘கெஞ்சியும் கேட்கவில்லை…’ – டெல்லியில் பிஎம்டபுள்யூ விபத்தில் உயிரிழந்த அரசு அதிகாரி மனைவி வாக்குமூலம்

    September 15, 2025
    தேசியம்

    Bihar SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அக்.7-ல் இறுதி விசாரணை

    September 15, 2025
    தேசியம்

    உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள வக்பு சட்ட விதிகள் குறித்து அரசு ஆராயும்: கிரண் ரிஜிஜு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்
    • ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்
    • ‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை
    • கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்
    • வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.