Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இதுதான் புதிய இயல்பா?” – பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி!
    தேசியம்

    “இதுதான் புதிய இயல்பா?” – பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி!

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இதுதான் புதிய இயல்பா?” – பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கேள்வி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறப்பட்டிருப்பதாவது: “பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இன்றைய சந்திப்பை பின்வரும் சூழல்களில் மதிப்பிட வேண்டும்:

    2020 ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு காரணமாக, நமது 20 துணிச்சலான வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இது நடந்த போதிலும், ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு மோசமான முறையில் நற்சான்றை வழங்கினார்.

    லடாக்கில் சீன எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று ராணுவத் தளபதி கோரியிருந்தார். அதை அடையத் தவறிய போதிலும், மோடி அரசாங்கம் சீனாவுடன் நல்லிணக்கத்தை நோக்கி நடவடிக்கை எடுத்தது அந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை மறைமுகமாக நியாயப்படுத்தியது.

    2020 ஜூலை 4 அன்று, துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து வலுவாகவும் தெளிவாகவும் கருத்துகளை முன்வைத்தார். இருப்பினும், இந்த அச்சுறுத்தும் கூட்டணிக்கு தீர்க்கமாக பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது சீனாவுக்கு அரசுமுறை பயணங்களின் மூலம் வெகுமதி அளித்து வருகிறது.

    யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பெரிய நீர்மின் திட்டத்தை அறிவித்துள்ளது, இது நமது வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனாலும், இந்த விவகாரம் குறித்து மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    சீன இறக்குமதிகளை கட்டுப்பாடில்லாமல் இந்தியாவில் கொட்டுவது தொடர்கிறது. இது நமது சிறுகுறு தொழில் பிரிவுகளை கடுமையாக பாதிக்கிறது. மற்ற நாடுகளைப் போல கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, இந்தியா சீன இறக்குமதியாளர்களுக்கு கிட்டத்தட்ட சுதந்திரமான கட்டுப்பாட்டை வழங்கியுள்ளது.

    ‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா?” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    September 1, 2025
    தேசியம்

    21-ம் நூற்றாண்டை வரையறுக்க வல்லது இந்தியா – அமெரிக்கா உறவு: அமெரிக்க தூதரகம்

    September 1, 2025
    தேசியம்

    கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு

    September 1, 2025
    தேசியம்

    Bihar SIR: செப்.1-க்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கோரலாம்: தேர்தல் ஆணையம் தகவல்

    September 1, 2025
    தேசியம்

    மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: தண்ணீர் அருந்தப் போவதில்லை என மனோஜ் ஜாரங்கி சபதம்

    September 1, 2025
    தேசியம்

    சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன: பாக். பிரதமர் இருந்தபோதே மறைமுகமாக சாடிய மோடி

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது” – அன்புமணி
    • வயிற்று புற்றுநோய் அபாயத்தை பாதியாக குறைக்கக்கூடிய 4 எளிய பழக்கங்களை ஹார்வர்ட் டாக்டர் வெளிப்படுத்துகிறார்
    • 20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    • முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • அதிக எடை இருப்பது சிறுநீரக கற்களுக்கு எவ்வாறு பங்களிக்கிறது, அதைப் பற்றி என்ன செய்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.