Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘இதுதான் என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ – பஹல்காமில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி நெகிழ்ச்சி
    தேசியம்

    ‘இதுதான் என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ – பஹல்காமில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி நெகிழ்ச்சி

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இதுதான் என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ – பஹல்காமில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி நெகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை வரவேற்றுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இதுதான் தன் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியும் இதில் ஒருவர். அவர் தனது மனைவியுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மனைவி கண் முன்னே கொல்லப்பட்டார்.

    லஷ்கர் இ தொய்பாவின் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசு, ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கியது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி, இந்த தாக்குதலை வரவேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், அவர் எங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவரது ஆன்மா சாந்தியடையும்” என்று தெரிவித்துள்ளார்.

    சுபம் திவேதியின் தந்தை சஞ்சய் திவேதி, “நான் தொடர்ந்து செய்திகளைப் பார்த்து வருகிறேன். இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், நாட்டு மக்களின் வலிக்கு மதிப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை இந்திய ராணுவம் அழித்த விதத்திற்காக ராணுவத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து எனது முழு குடும்பமும் நிம்மதியாக உணர்கிறது.” என்று கூறினார். சுபம் திவேதியின் உறவினரான மனோஜ் திவேதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக நீதி வழங்கப்பட்டதாகக் கூறினார்.

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மற்றொருவரின் மனைவி பிரகதி ஜக்டேலும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். “நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதை பிரதமர் மோடி பாகிஸ்தானுக்குக் காட்டியுள்ளார். #OperationSindoor மூலம், பிரதமர் மோடி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    July 1, 2025
    தேசியம்

    தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    July 1, 2025
    தேசியம்

    65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    July 1, 2025
    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    தேசியம்

    தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

    July 1, 2025
    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.