Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இடஒதுக்கீடு ரயில் பெட்டியை போல மாறிவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் கருத்து
    தேசியம்

    இடஒதுக்கீடு ரயில் பெட்டியை போல மாறிவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் கருத்து

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இடஒதுக்கீடு ரயில் பெட்டியை போல மாறிவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார்.

    மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டப் போரட்டத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ தொகுதி மறுவரையின்போது ஓபிசி குறித்த தரவுகள் இருந்தபோதும் அதனை பயன்படுத்தி மகாராஷ்டிர அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    மாறாக சில அதிகாரிகளை மட்டும் கைக்குள் வைத்துக்கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்தை அரசு தன்னிச்சையாக நடத்தி வருகிறது. எனவே, விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

    மற்றொரு வழக்கறிஞரான கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், “ ஓபிசி பிரிவில் அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டும். அதுதான் இடஒதுகீட்டின் உண்மையான நோக்கம்” என்றார்.

    இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், “ நாட்டில் இடஒதுக்கீடு என்பது ரயில் பெட்டிகளைப் போல மாறிவிட்டது. அதில் இடம் கிடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மற்றவர்களை உள்ளே வரவிட விரும்புவதில்லை. இதுதான் உள்ளடக்க கொள்கையாக தற்போது மாறி உள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிக வகுப்புகளை அடையாளம் காண அரசுகள் கடமைப்பட்டுள்ளன.

    நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் (இடஒதுக்கீட்டின்) பலன்களை பெறக்கூடாது? ஒருசில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின் சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன” என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    September 25, 2025
    தேசியம்

    மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காக காங். 10 வாக்குறுதிகள் – பிஹாரில் ராகுல் காந்தி வெளியீடு

    September 24, 2025
    தேசியம்

    ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

    September 24, 2025
    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் – வன்முறையால் பதற்றம்

    September 24, 2025
    தேசியம்

    விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்து ஆப்கனிலிருந்து டெல்லி வந்த சிறுவன்

    September 24, 2025
    தேசியம்

    “திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்க வேண்டும்” – தமிழிசை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    • ஆ.ராசா இருந்தும் ஆட்டம் காட்டும் திமுக கோஷ்டிகள் – உதகையும் உள்குத்து அரசியலும்!
    • ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்தியா: வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது!
    • முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை 
    • சரியான அளவு தண்ணீரை குடிப்பது பக்கவாதம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.