Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
    தேசியம்

    ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

    adminBy adminAugust 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர். மேலும் சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவுஎடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,கடந்த மே 13 அன்று அரசியல மைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி யிருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில ளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வாதத்தில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நிர்ணயம் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். அதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்பு சட்ட ரீதியாக சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை என பின்னிப்பிணைந்து ஒருங்கிணைந்தே செயல்பட முடியும். கூட்டாட்சியின் அங்கமாக விளங்கும் ஆளுநர்களை அந்நியர்கள் போல பாவிக்கக்கூடாது.

    குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் படி மற்ற அமைப்புகளின் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரமும் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு, அளிக்கப்பட்டுள்ள அதிகாரமும் தனித்துவமானது. அதை நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாது. ஆளுநர் தனக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு மசோதாவை அங்கீகரிக்கவோ, நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கவோ முடியும். இதற்கு சட்ட ரீதியாக எந்த காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை, உச்ச நீதிமன்றம் தனது விருப்பப்படி காலவரம்புகளை நிர்ணயம் செய்வது அரசியலமைப்பின் வடிவமைப்பையே மாற்றி விடும்.

    அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142 பரந்த அதிகாரம் கொண்டது என்றாலும், அரசியலமைப் பின் வெளிப்படையான விதிகளை மீற முடியாது. ஒருவேளை உச்சபட்ச அதிகாரம் படைத்த அரசியலமைப்பு சட்ட ரீதியாக பதவி வகிப்பவர்களின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருந்தாலும் அதை நீதித்துறையின் உத்தரவுகள் மூலமாக சரிசெய்ய முடியாது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதத்தில், ‘‘குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் உரிய அதிகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தமிழகம், தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்கள் அந்தந்த ஆளுநர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

    உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலநிர்ணயம் செய்ய எந்த தடையும் இல்லை. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுவோ அல்லது திருத்த மனுவோதாக்கல் செய்துதான் தீர்வு காண முடியும். குடியரசுத் தலைவரின் கேள்விகள் மூலமாக தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய முடியாது. ஏனெனில் அரசியலமைப்பு சட்டரீதியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள இந்த கேள்விகளை அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஏற்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்ப வேண்டும்’’ எனக்கூறியுள்ளது, இந்த வழக்கு ஆக.19 அன்றுமீண்டும் விசாரணைக்கு வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக ஆலோசனை

    August 17, 2025
    தேசியம்

    பிஹாரில் ராகுல் காந்தியின் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ நாளை தொடக்கம்!

    August 16, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி – சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

    August 16, 2025
    தேசியம்

    ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் தான் இந்திய பிரிவினைக்கு காரணம்: என்சிஇஆர்டி

    August 16, 2025
    தேசியம்

    சீன வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!

    August 16, 2025
    தேசியம்

    ட்ரம்ப் – புதின் சந்திப்புக்கு இந்தியா வரவேற்பு: பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என கருத்து

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
    • சக்கர நாற்காலி கட்டுப்பட்ட பெண் மீண்டும் காலில் இறங்குகிறாள்; இந்த உணவு அவளுக்கு உதவியது என்று கூறுகிறது – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ சேவை
    • அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு முடிவுகள் நாளை வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.