Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை ஏமாற்றிய இந்திய ராணுவம்
    தேசியம்

    ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை ஏமாற்றிய இந்திய ராணுவம்

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை ஏமாற்றிய இந்திய ராணுவம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் எளிதாக ஏமாற்றி உள்ளது.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பிறகு கடந்த 7,8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது.

    கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை, இந்திய போர் விமானங்கள் பிரம்மோஸ், ஸ்கால்ப் உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் அழித்தன. இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

    பாகிஸ்தானின் ட்ரோன், போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்க அந்த நாட்டின் விமான படை தளங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் லட்சியா என்ற ஆளில்லா ட்ரோன்கள் பாகிஸ்தான் விமான படை தளங்கள் மீது பறக்க விடப்பட்டன.

    இந்த ட்ரோன்கள் சுகோய், மிக் 29 ரக போர் விமானங்கள் போன்று தத்ரூபமாக தயார் செய்யப்பட்டு இருந்தன. இவை உண்மையான போர் விமானங்கள் என்று நம்பிய பாகிஸ்தான் விமானப்படை அனைத்து வான் பாதுகாப்பு கவசங்களையும் ஒரே நேரத்தில் இயக்கியது.

    லட்சியா ட்ரோன்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் விமானப் படையும் இணைந்து தரை, வான் வழியாக பல்வேறு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. ஆனால் மணிக்கு 850 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன்கொண்ட லட்சியா ட்ரோன்களை பாகிஸ்தான் விமானப் படையால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. இந்தியாவின் போலி போர் விமானங்களுடன் பாகிஸ்தான் போர் விமானங்கள் மிக தீவிரமாக போரிட்டு கொண்டிருந்தன. அந்த நாட்டு ராணுவம் மற்றும் விமானப் படையின் முழு கவனமும் லட்சியா ட்ரோன்கள் மீது இருந்தன.

    இந்த நேரத்தில் இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து சுகோய், ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமான படைத் தளங்களை குறிவைத்து சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசின.

    சுகோய் போர் விமானங்களில் இருந்து அடுத்தடுத்து சீறிப் பாய்ந்த 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான படை தளங்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதேபோல ரஃபேல் போர் விமானங்களில் இருந்து சீறிப் பாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான படை தளங்களை துவம்சம் செய்தன.

    இதில் பாகிஸ்தானின் 11 விமான படை தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்தன. ஏராளமான போர் விமானங்கள் அழிந்தன. ஓடுதளங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டதால் எந்தவொரு போர் விமானத்தையும் இயக்க முடியாத சூழல் எழுந்தது.

    மேலும் லட்சியா ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பது மிகத் துல்லியமாக கண்டறியப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டின் எச்கியூ-9 என்ற வான் பாதுகாப்பு கவசங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

    July 10, 2025
    தேசியம்

    பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட செல்போனில் 2 மடங்கு நேரம் செலவிடும் இந்திய குழந்தைகள்!

    July 10, 2025
    தேசியம்

    தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    July 10, 2025
    தேசியம்

    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

    July 9, 2025
    தேசியம்

    வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்

    July 9, 2025
    தேசியம்

    ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
    • ‘நிகிதா கல்லூரிக்கு வந்து செல்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?’ – பாலபாரதி
    • வைட்டமின் பி 12 குறைபாடு பெரும்பாலும் மாலாப்சார்ப்ஷனால் ஏற்படுகிறது: 3 ஆச்சரியமான காரணங்கள் மக்கள் நன்றாக சாப்பிட்டாலும் அதை உறிஞ்ச முடியாது
    • ‘அவர்களின் பாலமாக இருப்பதில் பெருமிதம்’: இந்திய அறிவியலை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதில் சுபன்ஷு சுக்லா – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி? – ENG vs IND

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.