Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆயுள் தண்டனை கைதி பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல்: 8 ஆண்டுகளில் 375 நாள் சிறையிலிருந்து வெளியே வந்ததால் சர்ச்சை
    தேசியம்

    ஆயுள் தண்டனை கைதி பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல்: 8 ஆண்டுகளில் 375 நாள் சிறையிலிருந்து வெளியே வந்ததால் சர்ச்சை

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆயுள் தண்டனை கைதி பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல்: 8 ஆண்டுகளில் 375 நாள் சிறையிலிருந்து வெளியே வந்ததால் சர்ச்சை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள் பரோல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 8 வருடங்களில் 375 நாள் வெளியில் வந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

    பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல துறவியாக இருப்பவர் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீம். இவர் தனது டேரா சச்சா சவுதா மடத்தின் ஹரியானா ஆசிரமத்தில் 2 இளம் பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவானது. இதில் ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கடந்த 2017-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 2019-ல் பத்திரிகையாளர் ராமச்சந்திர சத்ரபதி கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஹரியானாவின் ரோத்​தக், சுனரியா சிறை​யில், 2017 முதல் பாபா ராம் ரஹீம் இருந்து வரு​கிறார். இவருக்கு நேற்று முன்​தினம் மீண்​டும் 40 நாள் பரோல் கிடைத்​துள்​ளது. கடந்த 3 மாதங்​களில் இவர் பரோலில் வரு​வது இது 2-வது முறை​யாகும். மேலும் 8 ஆண்டு சிறை வாழ்க்​கை​யில் இவர் இது​வரை 18 முறை பரோல் பெற்​றது சர்ச்​சை​யாகி வரு​கிறது. 18 முறை பரோல் காரண​மாக இவர் ஒரு வருடத்​துக்​கும் மேலாக சிறைக்கு வெளி​யில் இருந்​துள்​ளார்.

    இவருக்கு தொடக்​கத்​தில் 5 ஆண்​டு​கள் வரை மற்ற கைதி​களை போல ஒன்று அல்​லது இரண்டு முறை பரோல் கிடைத்​தது. ஆனால் ஹரி​யானா அரசு மேற்​கொண்ட சட்​டத்​திருத்​தம் காரண​மாக 2022, பிப்​ர​வரி 7 முதல் ஒவ்​வொரு ஆண்​டும் சராசரி​யாக 91 நாட்​கள் பரோல் கிடைத்து வரு​கிறது. ஹரி​யா​னா​வில் இவரை போல ஆயுள் தண்​டனை கைதி​கள் 2,824 பேர் உள்​ளனர். ஆனால் அவர்​களில் பெரும்​பாலானோருக்​கு, ராம் ரஹீமை போல் இவ்​வளவு பரோல்​கள் கிடைப்​ப​தில்லை எனப் புகார் நில​வு​கிறது.

    குஜ​ராத்​தின் பில்​கிஸ் பானு வழக்கை தவிர்த்​து, பாபா ராம் ரஹீ​முக்கு கிடைத்த பரோல், மிகப்​பெரிய சாதனை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2022 டிசம்​பரில் உச்ச நீதி​மன்​றத்​தில் பில்​கிஸ் பானு பிர​மாணப் பத்​திரம் அளித்​திருந்​தார். அதில், தனக்கு எதி​ராக குற்​றம் சாட்​டப்​பட்ட 11 பேரில், 10 பேர் தண்​டனை பெற்ற பிறகு ஆயிரம் நாட்​கள் பரோல்​ மற்​றும்​ விடு​முறை எடுத்​துள்​ள​தாக கூறி​யிருந்​​தார்​.

    ஆயுத வழக்​கில்​ சிக்​கிய ​பாலிவுட்​ நட்​சத்​திரம்​ சஞ்​சய்​ தத்​, ஜெஸி​கா லால்​ கொலை வழக்​கில்​ ஆயுள்​ தண்​டனை பெற்​ற மனு சர்​​மா ஆகியோ​ரும்​ பரோல்​கள்​ பெற்​ற​தில்​ சர்​ச்​சை​யில்​ சிக்​கினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மஹுவா மொய்த்ரா திருமண வரவேற்பில் அரசியல் பிரபலங்கள்!

    August 7, 2025
    தேசியம்

    எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    August 7, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 7, 2025
    தேசியம்

    எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி

    August 7, 2025
    தேசியம்

    டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தை திறந்தார் மோடி

    August 7, 2025
    தேசியம்

    உத்தராகண்டில் பெருவெள்ளம், நிலச்சரிவு; மீட்புப்பணி தீவிரம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
    • கிளி மீன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • பண்டைய டி.என்.ஏ நோர்வேயில் 75,000 ஆண்டுகள் பழமையான விலங்கு எச்சங்களை வெளிப்படுத்துகிறது: பி.என்.ஏ.எஸ் ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மஹுவா மொய்த்ரா திருமண வரவேற்பில் அரசியல் பிரபலங்கள்!
    • தமிழ் மரபு குறித்து எடுத்துரைக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.