Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி
    தேசியம்

    ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள் மீது நடிகை ரம்யா புகார்: நடவடிக்கைக்கு கர்நாடக அரசு உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்தார்.

    கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதானார். அவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தது. இதற்கு கன்னட திரைப்பட நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா, “கொல்லப்பட்ட‌ ரேணுகா சாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய 11 பேரின் பெயர்களை குறிப்பிட்டு ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்தார்.

    இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது, “தர்ஷனின் ரசிகர்கள் என‌க்கு ஆபாச குறுஞ்செய்திகள் மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முன்னாள் எம்பியும் நடிகையுமான எனக்கு எவ்வித பயமும் இல்லாமல் பகிரங்கமாக பலாத்கார மிரட்டல் விடுக்கின்றனர். இது போன்ற ஒழுக்கமற்றவர்கள் தான் பெண்களை துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

    இதனிடையே கர்நாடக மகளிர் ஆணையம், ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறுகையில், “ரம்யாவின் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படும். அவருக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு காவல் ஆணையரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன். இத்தகைய மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே முதல்வர் நரேந்திர மோடி: ஜெயராம் ரமேஷ்

    September 22, 2025
    தேசியம்

    எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள்

    September 22, 2025
    தேசியம்

    அருணாச்சல், திரிபுராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

    September 22, 2025
    தேசியம்

    ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி திருடிய பயணிகள் சிக்கினர்

    September 22, 2025
    தேசியம்

    விகாஸ் மித்ராக்கள் ‘டேப்லட்’ வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

    September 22, 2025
    தேசியம்

    வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு ஏற்பாடு: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கட்சியை தோற்கடித்தவருக்கா மீண்டும் கழகத்தில் சீட்? – ரகளைக்கு தயாராகும் சேந்தமங்கலம் ரத்தத்தின் ரத்தங்கள்!
    • ஒளிரும் தோல் சாறு: அந்த இறுதி பளபளப்பிற்காக இந்த சாற்றை நவரத்ரியில் குடிக்கவும்
    • 2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே முதல்வர் நரேந்திர மோடி: ஜெயராம் ரமேஷ்
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா டி20 சேசிங்கில் 8-0: சுவாரஸ்ய தகவல்
    • திரிபுராவில் பிரதமர் திறந்துவைக்கும் திரிபுர சுந்தரி கோயில்: மத்திய அரசால் ரூ.52 கோடியில் புனரமைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.