Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு

    adminBy adminAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி சார்பில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    நாடாளுமன்றத்தில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றம் காலை 11 மணிக்குக் கூடியதும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மசோதாக்கள் குறித்து முழுமையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால், நாட்டின் நலன் கருதி மசோதாக்களை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவை குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. இந்த மசோதாக்களை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. எனவே, நாளை முதல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்தும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உத்தராகண்ட் மேக வெடிப்பு: வெள்ளம், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்

    August 5, 2025
    தேசியம்

    இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து: அக்.1 முதல் நேரடி விமான சேவை

    August 5, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

    August 5, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் – பாதிப்பு நிலவரம் என்ன?

    August 5, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியுடன் பிலிப்பைன்ஸ் அதிபர் சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதி

    August 5, 2025
    தேசியம்

    ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் நெஞ்சுரம்’ – சத்ய பால் மாலிக் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம்? – அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • 111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு
    • ஆப்டிகல் மாயை: ஒற்றைப்படை ‘வண்ணத்தை’ நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உத்தராகண்ட் மேக வெடிப்பு: வெள்ளம், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்
    • “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” – இபிஎஸ் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.