Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் பாஜக கொடி யாத்திரை
    தேசியம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் பாஜக கொடி யாத்திரை

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் பாஜக கொடி யாத்திரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா (கொடி யாத்திரை)’ நடத்துகிறது.

    காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22-ல் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் ராணுவத்தின் துணிச்சலை எடுத்துச் சொல்லவும், அவர்களின் சாதனைகளை பட்டியலிடவும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் யாத்திரையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராகிறது.

    தேசியக் கொடிகளுடன் பாஜகவினர் நடத்தும் இந்த யாத்திரை மூலம், பொதுமக்களுடன் கட்சியினர் நேரடியாகத் தொடர்புகொள்கின்றனர். ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாடு முழுவதிலுமான பாஜகவினரின் இந்த கொடி யாத்திரை, மே 13 முதல் 23 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளன. யாத்திரையின் பிரச்சாரத்தின் போது பல்வேறு மட்டங்களிலான பாஜகவினர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்ள இருகிறார்கள்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பிறகு, திங்கள்கிழமை பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகத்துறையின் பியூஷ் கோயல், மனோகர் லால் கட்டார், கிரண் ரிஜிஜு, பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொடி யாத்திரைக்கான உத்தி வகுக்கப்பட்டு, யாத்திரை இன்று நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, “திடீர் எனப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட விதமும், அந்த தகவல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூலம் உலகுக்கு வழங்கப்பட்டதிலும் கட்சியின் முக்கிய வாக்கு வங்கிகள் ஏமாற்றமடைந்துள்ளன.

    இந்த ஏமாற்றத்தை நீக்குவது எங்கள் கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. நேற்று பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இச்சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் நம்பிக்கையும் கட்சிக்கு உள்ளது. போர் நிறுத்த முடிவில் மூன்றாம் தரப்பினர் யாரும் ஈடுபடவில்லை என்பதையும், பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.

    இவற்றை பொதுமக்கள் முன்பாக எடுத்துரைக்கவே இந்த கொடி யாத்திரை. மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிவரும் விமர்சனங்களையும் தடுத்து நிறுத்துவோம்.” எனத் தெரிவித்தனர்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நேரடியான மற்றும் வலுவான பதிலடி கொடுப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.

    இந்த தாக்குதல் நடவடிக்கையில், இந்திய ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்று பெரும் வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடியும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதாகவே கருதப்பட்டது. இதன்பிறகு, திடீர் என அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் சிலரை ஏமாற்றமடையச் செய்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஹைட்ராலிக் கோளாறால் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் தாயகம் புறப்பட்டது

    July 23, 2025
    தேசியம்

    உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை

    July 23, 2025
    தேசியம்

    இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் 30-ல் விண்ணில் பாய்கிறது!

    July 23, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்

    July 22, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு

    July 22, 2025
    தேசியம்

    போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச்களில் எந்த பிரச்சினையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹைட்ராலிக் கோளாறால் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் தாயகம் புறப்பட்டது
    • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு
    • முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!
    • உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை
    • மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.