Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு

    adminBy adminJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது:

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால் இதைவிட மிகவும் ஆக்ரோஷமான பதிலடி இந்தியாவிலிருந்து கொடுக்கப்படும். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை எத்தியோப்பியா கண்டித்துள்ளதுடன் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்தியா எடுத்துள்ள சுய பாதுகாப்பு நடவடிக்கையை எத்தியோப்பியா மிகவும் பாராட்டியுள்ளது. எத்தியோப்பிய மக்களுடன் எங்களுக்குள்ள உறவு வலுவாகவும் நட்பாகவும் இருந்து வருகிறது. இந்தியாவின் சுயமரியாதையைப் பொறுத்தவரை, நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். இவ்வாறு மணிஷ் திவாரி பேசினார்.

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், சல்மான் குர்ஷித் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது மணீஷ் திவாரியும் மத்திய அரசை புகழும் வகையில் பேசியுள்ளார்.

    ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாளும் நிலையில் இவர்களின் இந்த கருத்து அந்த கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், ராணுவ நடவடிக்கைகளின்போது விமான இழப்பை பாதுகாப்பு படைத் தலைவர் உறுதிப்படுத்திய பின்பு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்த உள்ளதாகவும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்கெனவே தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

    September 10, 2025
    தேசியம்

    மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் அரசுகள் வாதம்

    September 10, 2025
    தேசியம்

    ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்

    September 10, 2025
    தேசியம்

    கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்

    September 10, 2025
    தேசியம்

    நிலம் உள்வாங்கியதில் காஷ்மீரில் 50 கட்டிடங்கள் சேதம்

    September 10, 2025
    தேசியம்

    வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
    • ‘சாதாரண’ கொழுப்பு மற்றும் மாரடைப்பு பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை, நீண்ட ஆயுள் நிபுணர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுனிதா வில்லியம்ஸின் குழந்தை பருவ கனவு ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளியில் இருந்து வெகு தொலைவில் இருந்தது; இங்கே அவள் வேண்டும் என்று கனவு கண்டது, ஏன் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?
    • சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.