Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 6 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி சொல்வது என்ன?
    தேசியம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 6 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி சொல்வது என்ன?

    adminBy adminAugust 10, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 6 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் தீவிர போர் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் விமானப்படை தளங்கள், வான் பாதுகாப்பு கவசங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது. அந்த நாட்டு ராணுவ மூத்த அதிகாரி, இந்திய ராணுவ மூத்த அதிகாரியை தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கோரினார். இதையடுத்து, இரு நாடுகள் இடையே மே 10-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அவர்களது சந்தேகங்களுக்கு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விமானப்படையின் 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழிவு, பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஏ.பி.சிங் பேசியதாவது: இந்திய அரசியல் தலைமையின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ மாபெரும் வெற்றி பெற்றது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது, நமது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    தலைமைத் தளபதி அனில் சவுகான் முப்படைகளுக்கு இடையே பாலமாக செயல்பட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து உளவு அமைப்புகளையும் ஒன்றிணைத்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். பாகிஸ்தான் மக்களுக்கு சிறு பாதிப்புகூட இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 தீவிரவாத முகாம்களும் தரைமட்டமாகின. முரித்கே நகரில் லஷ்கர் இ தொய்பா இயக்க மூத்த தலைவர்கள் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைமையகம் முழுமையாக தகர்க்கப்பட்டது.

    புதிய உலக சாதனை: இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் போர் தொடுத்தது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த போரில் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மிக முக்கிய பங்கு வகித்தது. எஸ்-400 ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய எல்லையில் இருந்து சுமார் 300 கி.மீ. தூரத்தில் பறந்த பாகிஸ்தானின் உளவு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்மூலம், மிக அதிக தொலைவில் பறந்த உளவு விமானத்தை தரையில் இருந்து சுட்டு வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தோம். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    எஃப்-16 போர் விமானங்கள் அழிப்பு: சுகோய் போர் விமானம் மூலம் பிரம்மோஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதில், பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் உள்ள ஷாபாஸ் விமானப்படை தளம் உருக்குலைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் ஓர் உளவு விமானம் கடுமையாக சேதமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. போரில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்கள், ரேடார்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.

    இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்தது மரபு சார்ந்த போர் அல்ல. இந்த உயர்தொழில்நுட்ப போர் சுமார் 90 மணி நேரம் நீடித்தது. பெரும்பாலும் வான்வழி தாக்குதல்களே நடந்தன. இதில், பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களால் இந்திய எல்லையை தாண்ட முடியவில்லை அவை அனைத்தும் இந்தியாவின் ‘ஆகாஷ்’, எம்ஆர்எஸ்ஏஎம் (நடுத்தர தொலைவு), எல்ஆர்எஸ்ஏஎம் (நீண்ட தொலைவு) வகை ஏவுகணைகளால் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், இந்தியராணுவ தளங்கள், நிலைகள், இந்திய விமானப்படை தளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலை முறியடித்ததில் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன. இவ்வாறு அவர் பேசினார். ‘‘இந்தியா – பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ‘சரியான நேரத்தில் சரியான முடிவு’ – ‘‘கடந்த 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஆனால், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அப்போது, போதிய ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க முடியவில்லை. ஆனால், தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் கடுமையாக சேதமடைந்தது தொடர்பாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    போர் நிறுத்தம் தொடர்பாக சிலர் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழிப்பதுதான் ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோள். அதில் முழு வெற்றி அடைந்துவிட்டோம். எனவே, போரை நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை. நமது நாடு மிக சரியான நேரத்தில், மிக சரியான முடிவைத்தான் எடுத்துள்ளது’’ என்று ஏ.பி.சிங் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

    August 9, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்!

    August 9, 2025
    தேசியம்

    இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!

    August 9, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    August 9, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

    August 9, 2025
    தேசியம்

    ‘சமஸ்கிருதம்’ காலத்தால் அழியாத அறிவின் ஆதாரமாக உள்ளது: பிரதமர் மோடி வாழ்த்து

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
    • கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    • பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
    • ஆப்டிகல் மாயை: மரம் அல்லது சிங்கம்? நீங்கள் முதலில் பார்ப்பது உறவுகளில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவல நிலையில் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை: புகார்களை அடுக்கும் மக்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.