புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் உள் பகுதிக்கு தங்கள் முகாம்களை மாற்றின. தற்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும் பாகிஸ்தானின் உள்பகுதிக்கு இடம் மாறியுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் தாக்குதலை தவிர்ப்பதற்காக, இந்த அமைப்புகள் தங்களின் இருப்பிடத்தை மாற்றி உள்ளன. ஆப்கன் எல்லையிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ள திர் மாவட்டத்தில் மர்கஷ் ஜிகாத்-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்-இ-தொய்பா கட்டியுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன. இத்தகவலை இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.