Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்

    adminBy adminAugust 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் இந்திய விமானப் படை உரையாற்றுவது இதுவே முதல்முறை. பஹல்காமில் தாக்குதல் நடந்த மறுநாள், மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தன. பின்னர், மூன்று படைகளும் தங்களின் செயல்பாட்டு விருப்பங்கள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 24ம் தேதி ஒரு உயர்மட்டக் குழுவிடம் வழங்கின.

    மூன்று படைகளின் அனைத்து விருப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நாங்கள் இலக்களை பட்டியலிட்டோம். அந்த வகையில், மூன்று படைகளின் விருப்பங்களின் பட்டியலில் இலக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அவற்றை நாங்கள் ஒன்பதாகக் குறைத்தோம். தாக்குதலுக்கான தேதி, நேரம் மட்டுமே முடிவு செய்ய வேண்டி இருந்தது. மே 5-ம் தேதி அந்த முடிவை எடுத்தோம். உங்களுக்குத் தெரியும், 6ம் தேதி இரவுக்கும் 7ம் தேதி அதிகாலைக்கும் இடையே நாங்கள் தாக்குதலை தொடங்கிவிட்டோம்.

    இதில், நாங்கள் முக்கியமாகக் கருதுவது என்னவென்றால், தாக்குதல் இலக்குகளை நாங்கள் 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டே முடித்துவிட்டோம். புதுடெல்லியின் உயர்மட்ட உத்தரவுகள் 3 தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தன. பதில் வலுவாக வெளிப்படையாக இருக்க வேண்டும், எதிர்கால தாக்குதல்களை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், முழு அளவிலான மோதலாக விரிவடைவதற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தைப் பெற வேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாம் எதிர்பார்ப்பது போலவே, வான் பாதுகாப்பு திறனின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுதர்சன் சக்ரம் அமைப்பு நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தனது தாக்குதலை மே 6-7 தேதிகளில் தொடங்கியது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. எனினும், அதனால் இந்திய தரப்புக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில், அதன் விமானப்படை விமானங்கள் பல கடும் சேதத்தை சந்தித்தன. இதனால், பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி, இந்திய ராணுவ உயரதிகாரியை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்ததன் பேரில் இந்தியா தனது தாக்குதலை மே 10-ம் தேதி நிறுத்தியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 58 யார்? ஜூலியா ராபர்ட்ஸின் வயதைக் குறைக்கும் கோல்டன் குளோப்ஸ் ஒளி இணையத்தில் அலறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் மிக ஆடம்பரமான பரிசுப் பை: கோல்டன் குளோப்ஸ் வெற்றியாளர்கள் ₹8.3 கோடி மதிப்புள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரியங்கா சோப்ராவின் கோல்டன் குளோப்ஸ் 2026 தோற்றம் மற்றும் அவரது 2020 தருணம்: அவர் ஒளிர்ந்தாரா அல்லது மெமோவை தவறவிட்டாரா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெளிப்படையான கருப்பு உடை மற்றும் சாக்லேட் முடி: கோல்டன் குளோப்ஸ் 2026 – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – பிளாக்பிங்கின் லிசா அசத்தலான புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்துகிறார்
    • இந்த அன்றாட சமையலறை ரொட்டி துண்டு உங்கள் வீட்டில் உள்ள சிறிய கண்ணாடி துண்டுகளை எடுக்க பாதுகாப்பான வழியாகும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.