Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது
    தேசியம்

    ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்​லி​யில் ஆன்​லைனில் தூக்க மாத்​திரை வாங்க நினைத்த மூதாட்​டி​யிடம் ரூ.77 லட்​சம் பறிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ‘டிஜிட்​டல் அரெஸ்ட்’ கும்​பலைச் சேர்ந்த 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் வசிப்​பவர் நீரு (62). தனி​யாக வசிக்​கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். அதற்​காக மருத்​து​வர்​கள் பல்​வேறு மருந்​துகளை பரிந்​துரைத்​துள்​ளனர். அத்​துடன் தூக்க மாத்​திரையை​யும் அவர் பயன்​படுத்தி வரு​கிறார்.

    இந்​நிலை​யில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்​திரை உட்பட தனக்கு தேவை​யான மருந்​துகளை வாங்க இணை​யதளத்​தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்​டர் செய்​துள்​ளார். அதன்​ பிறகு அதை மறந்​து​விட்​டார்.

    அதன் ​பிறகு நீரு​வின் தொலைபேசி​யில் ஒரு​வர் பேசி​னார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதி​காரி என்று அறி​முகப்​படுத்தி கொண்​டார். தடை செய்​யப்​பட்ட போதை மருந்​துகளை வாங்​கிய​தாக​வும் டெல்​லி​யில் போதை பொருட்​களை புழக்​கத்​தில் விடுத்​துள்​ள​தாக​வும் நீரு மீது குற்​றம் சுமத்​தி​னார்.

    இதனால் நீரு அதிர்ச்சி அடைந்​தார். பின்​னர், இதில் இருந்து தப்​பிக்க வேண்​டு​மா​னால் வங்கி கணக்கை சரி பார்க்க பணத்தை அனுப்ப வேண்​டும். இல்​லா​விட்​டால் கைது செய்​வோம் என்று அந்த போலி அதி​காரி மிரட்​டி​யுள்​ளார். பயந்து போன நீரு முதலில் ரூ.3 லட்​சம் அனுப்பி உள்​ளார்.

    பத்து நாட்​கள் கழித்து மீண்​டும் ஒரு​வர் பேசி​னார். அவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதி​காரி என்று அறி​முகப்​படுத்தி கொண்​டார். நீரு​வின் பணத்தை மீட்டு தரு​வ​தாக கூறி முதலில் ரூ.20 ஆயிரத்தை அனுப்​பி​யுள்​ளார். அதனால் நீரு​வுக்கு அந்த நபர் மீது நம்​பிக்கை வந்​தது. அதை தொடர்ந்து 2 நாட்​கள் கழித்து வீடியோ அழைப்​பில் 4 பேர் வந்​தனர். அவர்​களில் ‘அந்த நம்​பிக்​கைக்கு உரிய அதி​காரி’​யும் இருந்​தார்.

    அவர்​கள் அனை​வரும் சேர்ந்து மிரட்டி நெட் பேங்​கிங் தகவல்​களை நீரு​விடம் இருந்து வாங்​கி​யுள்​ளனர். அதன் ​பிறகு சிறிது நேரத்​தில் அடுத்​தடுத்து ரூ.5 லட்​சம், ரூ.10 லட்​சம் என நீரு​வின் வங்​கிக் கணக்​கில் இருந்து பணம் கழிந்து கொண்டே சென்​றது. இது​போல் மொத்​தம் 77 லட்​சத்தை அந்த கும்​பல் பறித்​துக் கொண்​டது.

    இதையடுத்து செப்​டம்​பர் 24-ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீ​ஸில் நீரு புகார் அளித்​தார். சிறப்பு பிரிவு ஏசிபி மனோஜ் குமார், எஸ்ஐ கரம்​வீர் ஆகியோர் இதுகுறித்து தீவிர விசா​ரணை நடத்தி வந்​தனர்.

    ஒன்​பது மாதங்​களுக்​குப் பிறகு டெல்லி முகர்ஜி நகரில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் அகிலேஷ் என்​பவரை கைது செய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு தகவல்​கள் கிடைத்​தன. அதன் அடிப்​படை​யில், ஹரி​யா​னா​வில் அம்​ஜத், ஷாகித், ஷகில், ஹமித் ஆகிய 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

    இது​வரை அந்த கும்​பலிடம் இருந்து ரூ.3 லட்​சத்தை போலீ​ஸார் மீட்டு நீரு​விடம் ஒப்​படைத்​துள்​ளனர். கைது செய்​யப்​பட்ட 5 பேரின் மொபைல் போன்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்து ஆய்வு செய்​தனர். அப்​போது மேலும் பலரிடம் இது​போல் பணம் பறித்துள்ளது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தப்​படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

    July 29, 2025
    தேசியம்

    “பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை

    July 29, 2025
    தேசியம்

    Bihar SIR | பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் உடனடியாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம்

    July 29, 2025
    தேசியம்

    நிமிஷா மரண தண்டனை ரத்தா? – வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுப்பு!

    July 29, 2025
    தேசியம்

    “பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

    July 29, 2025
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலுக்காக அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை? – பிரியங்கா காந்தி

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை: உங்களுக்கு கூர்மையான கண்கள் மற்றும் அவதானிப்பு இருக்கிறதா ?? மறைக்கப்பட்ட விலங்கைக் கண்டுபிடி !! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்
    • சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு
    • 8 உங்கள் இன்சுலின் அதிகரிக்கும் அன்றாட காலை உணவு பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.