Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி
    தேசியம்

    ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. உட்பட 12 பேர் கைது: மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமராவதி: ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஜெகன் கட்​சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்​டிக்கு நெருக்​கடி முற்​றி​யுள்​ளது.

    ஆந்​திர மாநிலத்​தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்​தார். அப்​போது, தமிழகத்தை போன்று ஆந்​தி​ரா​விலும் அரசே மதுக்​கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது புதுப்​புது ‘பி​ராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்​தன.

    மது​பான கடைகளில் அனைத்​தும் டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றத்​துக்கு பதில் வெறும் ரொக்​கம் மட்​டுமே பெறப்​பட்​டது. இதனால், கோடிக் கணக்​கில் பணம் கை மாறு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தவிர, மது​பானங்​களும் மிக​வும் தரமற்ற வகை​யில் இருந்த​தாக​வும் கூறப்​பட்​டது.

    இந்​நிலை​யில், ஆந்​தி​ரா​வில் ஆட்சி மாறியதும், மது​பான விற்​பனை ஊழல் குறித்து விசா​ரிக்க சந்​திர​பாபு அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்​தது. இக்​குழு தீவிர விசா​ரணையை மேற்​கொண்டு 305 பக்க முதற்​கட்ட விசா​ரணை அறிக்​கையை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தது. ஜெகன்​மோகன் ரெட்டி ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடி ஊழல் நடந்​த​தாக சிறப்பு விசா​ரணை குழு தனது அறிக்​கை​யில் தெரி​வித்​து உள்​ளது.

    இதில் முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யும் குற்​ற​வாளி என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. மாதா மாதம் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டு, அப்​பணம் முதல்​வ​ராக இருந்த ஜெக​னுக்கு தனிப்​பட்ட நபர்​கள் மூலம் வழங்​கப்​பட்​ட​தாக ஆதா​ரப்​பூர்​வ​மாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

    இதில், கேசிரெட்டி ராஜசேகரரெட்டி என்​பவர் முதல் குற்​ற​வாளி​யாக​வும், இதற்கு மூளை​யாக​வும் செயல்​பட்டு உள்​ளார். மது​பான ஊழல் பணத்​தில் கடந்த 2024-ல் ஆந்​தி​ரா​வில் நடந்த தேர்​தலுக்கு ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் கட்சி ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை சந்​திரகிரி முன்​னாள் எம்​.எல்.ஏ செவிரெட்டி பாஸ்​கர் ரெட்டி மூல​மாக செல​விட்​டுள்​ளது.

    மேலும், இந்த ஊழல் பணத்​தில் துபாய், தென் ஆப்​பிரிக்க நாடு​களில் 30 போலி நிறு​வனங்​கள் மூலம் தங்​கம், ரொக்​கம், சொகுசு பங்​களாக்​கள் மீது முதலீடு செய்​துள்​ளனர். இந்த வழக்​கில் சிறப்பு விசா​ரணை குழு இது​வரை ஜெகன் கட்​சியை சேர்ந்த ராஜம்​பேட்டை எம்பி மிதுன்​ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்​துள்​ளது.

    ரூ.62 கோடி சொத்​து பறிமுதல்: மேலும், ரூ.62 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை​யும் சிறப்பு விசா​ரணை குழு கைப்​பற்றி உள்​ளது. இது தொடர்​பாக இது​வரை 268 சாட்​சிகளை​யும் விசா​ரித்​துள்​ளது. ஆனால் இவை அனைத்​துமே அரசி​யல் பழி​வாங்​கும் நடவடிக்கை என்​றும், மக்​களை திசை திருப்​புவதற்​காக சந்​திர​பாபு நா​யுடு அரசு இவ்​வாறு செயல்​படு​வ​தாக ஒய்​எஸ்​ஆர்​ காங்​கிரஸ்​ கட்​சி குற்​றம்​ சாட்​டி உள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?

    July 22, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம்: அலுவல் ஆலோசனைக் குழு அறிவிப்பு

    July 22, 2025
    தேசியம்

    சிறையில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த உத்தரவு

    July 22, 2025
    தேசியம்

    திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!

    July 22, 2025
    தேசியம்

    மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    July 22, 2025
    தேசியம்

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 9 ஆரோக்கியமான உணவுகள் உண்மையில் ஆரோக்கியமற்றவை: லேபிள்களால் ஏமாற வேண்டாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?
    • சபரிமலையில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு: தரிசன முன்பதிவுகள் தொடங்கின
    • நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு
    • யோகா மற்றும் பண்டைய சீன நடைமுறைகள் உட்பட தூக்கமின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த 4 பயிற்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.