Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
    தேசியம்

    ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

    adminBy adminSeptember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது, 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏடிஆர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

    மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை, அடையாள ஆவணமாக ஏற்க வாக்குச்சாவடி அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 11 ஆவணங்கள் மட்டுமே ஆதாரங்களாக ஏற்படுகின்றன. எனவே 12-வது ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்க உத்தரவிட வேண்டும்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: ஆதார் அட்டை, அடையாள ஆவணமாக ஏற்கப்பட்டு வருகிறது. ஆனால், குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது. வாக்காளர் பட்டியலை தயார் செய்யும்போது குடியுரிமையை சரிபார்க்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.இவ்வாறு வாதம் நடந்தது.

    பிறகு நீதிபதிகள் கூறும்போது, “ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது. எனினும், அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியும். பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை செப்.15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்வது தொடர்பான கால அட்டவணையை வெளியிட கோரி உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாய் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு 

    September 9, 2025
    தேசியம்

    தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

    September 9, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு

    September 8, 2025
    தேசியம்

    பிஜேடி போலவே பிஆர்எஸ் கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு

    September 8, 2025
    தேசியம்

    Bihar SIR: ஆதாரை செல்லத்தக்க ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 8, 2025
    தேசியம்

    சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து
    • ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி தேயிலை சுகாதார நன்மைகள்: கிரீன் டீ அல்ல, இந்த சிவப்பு மலர் 10x சக்தியை பொதி செய்கிறது! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபத்தில் பூமி! பாதுகாப்பான சுற்றுச்சூழல் வரம்புகளுக்கு அப்பால் இப்போது உலகளாவிய நிலத்தில் 60%, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு
    • தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.