Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் கொடுங்கள்: ராகுலுக்கு 3 தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்
    தேசியம்

    ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் கொடுங்கள்: ராகுலுக்கு 3 தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் கொடுங்கள்: ராகுலுக்கு 3 தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘​வாக்கு திருட்​டு’ தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்​தல் அதிகாரி​கள் மீண்​டும் கடிதம் அனுப்பி உள்​ளனர். அதில், குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க கேட்​டுக் கொண்டுள்ளனர்.

    ‘‘மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்​டுள்​ளன. கர்​நாட​கா​வில் உள்ள மகாதேவபுரா தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

    இதுதொடர்​பாக கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் ஹரி​யானா மாநிலங்​களைச் சேர்ந்த தலைமை தேர்​தல் அதி​காரி​கள், ‘‘வாக்கு திருட்டு உண்மை என்​றால் சட்​டப்​படி உறு​தி​மொழி பத்​திரத்​தில் கையெழுத்​திட்டு ராகுல் காந்தி அளிக்க வேண்​டும். அல்​லது இந்த நாட்டு மக்​களிடம் மன்​னிப்பு கேட்க வேண்​டும்’’ என்று வலி​யுறுத்தி கடிதம் அனுப்​பினர்.

    இந்​நிலை​யில், மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா ஆகிய 3 மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​கள் மீண்​டும் ராகுல் காந்​திக்கு நேற்​று​முன்​தினம் கடிதம் அனுப்பி உள்​ளனர்.

    அதில், ஆதா​ரங்​கள், உறு​தி​மொழி பத்​திரம் ஆகிய​வற்றை கேட்​டுள்​ளனர். கடந்த 2024-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்போது மகாதேவபுரா தொகு​தி​யில் பெண் ஒரு​வர் 2 முறை வாக்​களித்​த​தாக ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யிருந்​தார். அந்​தப் பெண்​ணின் வாக்​காளர் அடை​யாள அட்​டையை வெளி​யிட்டு ஆதா​ர​மாக கூறி​னார்.

    இதுகுறித்து கர்​நாடக தலைமை தேர்​தல் அதி​காரி வி.அன்​பு​கு​மார், ராகுல் காந்​திக்கு 2-வது முறை​யாக கடிதம் அனுப்​பி​னார். அதில், ‘‘நீங்​கள் கூறியபடி ஷகுன் ராணி என்ற அந்த பெண்​ணின் வாக்​காளர் அட்டை குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

    நீங்​கள் (ராகுல்) கூறியது போல் மக்​களவை தேர்​தலில் 2 முறை வாக்​களிக்​க​வில்​லை. ஒரு முறை​தான் வாக்​களித்​தேன் என்று அவர் கூறி​யுள்​ளார். நீங்​கள் பத்​திரி​கை​யாளர் சந்​திப்​பில் காட்​டிய அந்த பெண்​ணின் ஆவணம் (டிக் அடித்து காட்​டப்​பட்​டது), தேர்​தல் அதி​காரி​யால் வழங்​கப்​பட​வில்​லை’’ என்று திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார்.

    தேர்​தல் அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘ஷகுன் ராணி​யின் பெயரை தேர்​தல் ஆணை​யம் வழங்​கியது போல் தனி பட்​டியலில் ராகுல் காட்​டி​யுள்​ளார். அது சித்​தரிக்​கப்​பட்ட ஆவணம். மகா​ராஷ்டிர தலைமை தேர்​தல் அதி​காரி எஸ்​.சொக்​கலிங்​கம்​தான் அவருக்கு கடிதம் கடிதம் அனுப்​பி​னார்.

    கடந்த 7-ம் தேதி ராகுல் காந்​திக்கு அனுப்​பிய அந்​தக் கடிதத்​தில், ‘‘குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க வேண்​டும். உண்​மை​தான் என்று கூறு​வதற்கு உறு​தி​மொழி பத்​திரத்தை கையெழுத்​திட்டு சமர்ப்​பிக்க வேண்​டும்’’ என்று வலி​யுறுத்தி இருந்​தார். அதற்கு 10 நாட்​கள் அவகாச​மும் தேர்​தல் அதி​காரி சொக்​கலிங்​கம் வழங்கி உள்​ளார்.

    ஹரி​யானா தலைமை தேர்​தல் அதி​காரி னி​வாசனும், ராகுல் காந்தி பதில் அளிக்க 10 நாட்​கள் அவகாசம் வழங்கி உள்​ளார். போலி ஆவணங்​களை காட்டி குற்​றம் சாட்​டி​னால், அதற்​கான சட்​டப்​பூர்வ நடவடிக்​கையை ராகுல் காந்தி எதிர்​கொள்ள வேண்டியிருக்கும்.

    பிஎன்​எஸ் சட்​டம் 337-வது பிரி​வின் கீழ் எப்​ஐஆர் பதிவு செய்து ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கவாய்ப்புள்​ளது. போலி ஆவணங்​களை காட்​டியது நிரூபிக்​கப்​பட்​டால்​ 7 ஆண்​டு வரை சிறை தண்​டனை கிடைக்​க வாய்ப்​புள்​ளது என்​று டெல்​லி வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூதாட்டி கைது

    September 15, 2025
    தேசியம்

    அமெரிக்காவில் ரூ.153 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி

    September 15, 2025
    தேசியம்

    பதுங்கு குழிகளில் தஞ்சமடையும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள்

    September 15, 2025
    தேசியம்

    சீன எல்லையில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30 ஆயிரம் கோடியில் ரயில் பாதை

    September 15, 2025
    தேசியம்

    கண் இமையில் பசையை ஊற்றி பள்ளி விடுதி மாணவர்கள் குறும்பு

    September 15, 2025
    தேசியம்

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் ‘கலாம் சபா’ – வி.டில்லிபாபு பெருமிதம்
    • “பள்ளி மாணவர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்த விஜய்” – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்
    • பிளாக்பிங்கின் லிசா டு செலினா கோம்ஸ்: 2025 எம்மிஸில் சிறந்த உடையணிந்த நட்சத்திரங்கள் | தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் 20, 21, அல்லது 23 அன்று ‘சூர்யா கிரஹான்’ இருக்குமா? நேரங்கள், தெரிவுநிலை மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூதாட்டி கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.