Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
    தேசியம்

    ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்ககளுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச உரையாற்றினார்.

    இதையடுத்து, கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது.

    இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.

    நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு இந்தியா அஞ்சாது என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ராணுவ மோதல் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, படைகள் களத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வருகை தந்தார். விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், வீரர்களின் துணிச்சலை பாராட்டினார். வீரர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

    தனது இந்த கலந்துரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இன்று அதிகாலையில், நான் AFS ஆதம்பூருக்குச் சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான் காட்டம்

    July 21, 2025
    தேசியம்

    எம்.பிக்களுக்கு மதச்சார்பின்மை வார்த்தை இடம்பெறாத அரசியலமைப்பு புத்தகம்: மக்களவைத் தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்

    July 21, 2025
    தேசியம்

    ‘ட்ரம்ப்புக்கு மோடியின் பதில் என்ன?’ – எதிர்க்கட்சிகளின் அமளியில் முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை!

    July 21, 2025
    தேசியம்

    கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லயோலா கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
    • வைட்டமின் டி ஷாட்களின் பக்க விளைவுகள் மற்றும் தடுக்கப்பட்ட தமனிகளுடன் அதன் தொடர்பைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி மயமாகிறது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்!
    • “மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்” – முத்தரசன் புகழஞ்சலி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.