புதுடெல்லி: நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் மற்ற பகுதிகளில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
செல்போன் செயலி மூலம் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் தகவல் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் தரவுகளை சேகரிக்க தங்கள் சொந்த செல்போனை பயன்படுத்துவார்கள். அதேநேரம் பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை தாங்களே பதிவு செய்ய ஏதுவாக ஒரு இணையதளம் தொடங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.