Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்
    தேசியம்

    அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வசித்து வரும், தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழலில், தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சந்திரசூட் விளக்கியுள்ளார்.

    புதுடெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து உச்ச நீதிமன்றத்தின் வீட்டுவசதி தொகுப்புக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த பங்களாவில் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தக் கடிதத்தில், ‘முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் இருந்து கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள பங்களா எண் 5ஐ தாமதமின்றி உடனடியாக கையகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்த பங்களாவில் தங்குவதற்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத காலம் மே 10, 2025 அன்று முடிவடைந்தது. மேலும், கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி மே 31, 2025 அன்று முடிவடைந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரசூட் விளக்கம்: இதுகுறித்து விளக்கமளித்துள்ள சந்திரசூட், ‘எனது இரு மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் மரபணு பிரச்சினை மற்றும் இணை நோய்கள் உள்ளன. அவர்களுக்கு எய்ம்ஸில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் தங்கும் வகையில் சிறப்பு வசதிகள் கொண்ட வீடு எனக்குத் தேவை. இதற்காக நான் பிப்ரவரி மாதம் அலைந்து திரிந்துவிட்டேன். சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களையும் முயற்சித்தேன், ஆனால் அவை எதுவும் எனக்கு ஒத்துவரவில்லை.

    அரசாங்கம் எனக்கு தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பங்களா இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால், அங்கே தற்போது பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவை முடிந்தவுடன் நான் வீட்டை மாற்றிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வாரிசு குறித்து தலாய் லாமா முடிவெடுக்க முடியாது’ – மீண்டும் சீனா திட்டவட்டம்

    July 6, 2025
    தேசியம்

    ‘தேர்தல் ஆணையம் கேட்ட 11 ஆவணங்களும் இல்லையென்றால்…’  – பிஹார் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    July 6, 2025
    தேசியம்

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை

    July 6, 2025
    தேசியம்

    ”இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” – சஞ்சய் ராவத் விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    ”நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டனர்” – பாஜக, நிதிஷ் குமார் மீது ராகுல் தாக்கு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    • மீண்டும் மீண்டும் வரும் யுடிஐக்கள் என்ன: அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க 5 எளிய வழிகள்
    • “ஏன் முடியாது?!” – அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்   
    • கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்
    • ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.