Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, January 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு சம்மன்
    தேசியம்

    அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு சம்மன்

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு சம்மன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது அரை நிரந்தர கட்டமைப்புகளை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

    இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முந்தைய கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் இணை ஆணையர் மதுர் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவர்கள் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    “சிவிசியின் தலைமை தொழில்நுட்ப ஆய்வாளரின் அறிக்கை, கட்டுமான திட்டத்தில் பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அனுப்பப்பட்டுள்ள சம்மனில், ஜூன் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சத்யேந்தர் ஜெயினுக்கும், ஜூன் 9 ஆம் தேதி ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று மதுர் வர்மா தெரிவித்துள்ளார்.

    ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-A இன் கீழ் உரிய அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் மதுர் வர்மா கூறியுள்ளார்.

    டெல்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு, பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்காந்த் பக்ஷி ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தனர்.

    புகாரில், ஒரு வகுப்பறை கட்டுவதற்கு சராசரியாக ரூ. 24.86 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்ற கட்டமைப்புகளைக் கட்ட ரூ. 5 லட்சம் போதும் என பொறியாளர்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சரிவில் அமெரிக்கா? தரவு அதன் ஏழ்மையான மாநிலங்கள் கூட இப்போது பெரும்பாலான G7 பொருளாதாரங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: ஆணா பெண்ணா? நீங்கள் ஆக்கப்பூர்வமாக அல்லது தர்க்கரீதியாக இருக்கிறீர்களா என்பதை முதலில் நீங்கள் கண்டறிவது தெரியவரும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அதிர்ஷ்ட மூங்கில் பராமரிப்பு: உங்கள் ‘அதிர்ஷ்டமான’ மூங்கில் தொடர்ந்து இறந்து கொண்டிருந்தால், நீங்கள் இந்த தவறுகளை செய்து இருக்கலாம்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அலுமினியத் தாளின் எந்தப் பக்கம் “வலது”? பளபளப்பான மற்றும் மந்தமான பக்கங்களுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்டீபன் ஸ்பென்சர் பிட்மேனை சந்திக்கவும்: ஆன்லைன் வெறுப்பின் செல்வாக்கின் கீழ் மிசிசிப்பி ஜெப ஆலயத்தை எரித்ததற்காக டீன் பேஸ்பால் வீரர் சிறையில் அடைக்கப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.