Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம்
    தேசியம்

    அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம்

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல் கார​சா​ர​மாக வாதிட்​டார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

    அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, உச்ச நீதி​மன்​றத்​துக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அந்த 10 மசோ​தாக்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​தனர். மேலும், சட்​டப்​பேர​வை​யில் மறுநிறைவேற்​றம் செய்​யப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்​தி​லும், குடியரசுத் தலை​வர் 3 மாத காலத்​தி​லும் ஒப்​புதல் அளிக்க வேண்​டு மென கால நிர்​ண​யம் செய்​தும் உத்​தர​விட்​டனர்.

    இதையடுத்​து, அதி​காரப்​பகிர்வு தொடர்​பாக அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக 14 கேள்வி​களை உச்ச நீதி​மன்​றத்​துக்கு எழுப்பி குடியரசுத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார். இதற்கு விடை காணும் வகை​யில் இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான 5 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடங்​கியது.

    அப்​போது தமிழக அரசின் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, பி.​வில்​சன் ஆகியோ​ரும், கேரள அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கே.கே.வேணுகோ​பாலும் ஆஜராகி வாதிட்​டனர்.

    “இந்த வழக்​கில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களுக்கு தமிழ்​நாடு மற்​றும் பஞ்​சாப் வழக்​கு​களில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பத்த தீர்ப்​பின் வாயி​லாக பதிலளிக்​கப்​பட்​டுள்​ளது. ‘கூடிய விரை​வில்’ என்​ப​தற்கு விளக்​கம் காணப்​பட்டு தமிழக ஆளுநருக்கு எதி​ராக தமிழக அரசு தொடர்ந்த வழக்​கில் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

    இந்த விவ​காரத்​தில் அரசி​யல் சாசன பிரிவு 143-ஐ பயன்​படுத்தி உச்ச நீதி​மன்​றத்​திடம் குடியரசுத் தலை​வர் கேள்வி​களை எழுப்பி விளக்​கம் கோர முடி​யாது. மொத்​தத்​தில், இந்த கேள்வி​களை குடியரசுத் தலை​வரின் கேள்வி​களாக கருத்​தில் கொள்​ளாமல், குடியரசுத் தலை​வர் வாயி​லாக மத்​திய அரசு எழுப்​பி​யுள்ள கேள்வி​களாகவே கருத வேண்​டும்” என வாதிட்​டனர்.

    அதையடுத்து மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, “அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சிக்​கல் எழுந்​தால் ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கு​மான பங்கு என்ன என்​பதை விளக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் குடியரசுத் தலை​வர் இந்த கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளார். கால நிர்​ண​யம் செய்து இரு நீதிப​தி​கள் அளித்​துள்ள தீர்ப்பே இறு​தி​யாகி விடாது.

    ஒரு​வேளை அரசியல் சாசன அமர்வு அந்த தீர்ப்பு தவறு என்றோ அல்​லது அதற்கு எதிர்​மறை​யான தீர்ப்​பையோ வழங்​கலாம். உச்ச நீதி​மன்​றம் வகுத்​துள்ள இந்த கால நிர்​ண​யத்​தால் சிக்​கல் எழுந்​துள்​ளது. ஏனெனில், இவ்​வாறு கால நிர்​ண​யம் செய்​யக்​கூ​டாது என்ற நோக்​கில்​தான் ‘கூடிய விரை​வில்’ என்ற வார்த்​தையை சட்​டமேதை அம்​பேத்​கர் பயன்​படுத்​தி​யுள்​ளார்” என்​றார்.

    அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி சூரிய​காந்த், “இந்த வழக்கு மேல்​முறை​யீட்டு வழக்கு அல்ல. குடியரசுத் தலை​வரின் விளக்​கம் கோரும் கடிதம் மீதான விசா​ரணை, அவ்​வளவு​தான்” என்​றார். அதற்கு அட்​டர்னி ஜெனரல் ஆர்​.வெங்​கட்​ரமணி, “ஒரு விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்த பிறகு அதுதொடர்​பாக சந்​தேகம் இருந்​தால் அரசி​யல் சாசன பிரிவு 143-ஐ பயன்​படுத்தி குடியரசுத் தலை​வர் விளக்​கம் கோர முடி​யும்.

    அந்த கேள்வி​களுக்கு உச்ச நீதி​மன்​ற​மும் பதிலளிக்க வேண்​டும். தமிழக ஆளுநருக்கு எதி​ரான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்றம், சட்​ட​மியற்​றும் அதி​கார வரம்​புக்​குள் சென்​று​விட்​டது. இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் அரசி​யல் சாசனத்தை மாற்றி எழு​தி​யுள்​ளது. இவ்​வாறு தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது” என கார​சா​ர​மாக வாதிட்​டார்.

    அப்​போது நீதிபதி பி.எஸ்​.நரசிம்​மா, “மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநரின் செயல்​பாடு​களை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர முடி​யா​தா, இந்த வாதங்​களை எப்​படி விளக்​கம் கோரும் வி​சா​ரணை​யில் முன்​வைக்க முடி​யும், உச்ச நீதி​மன்​றத்​திடம் கேட்​டுள்ள இந்த விளக்​கம் பலவகை​யிலும் இருக்​கலாம்’’ என கருத்து தெரி​வித்​தார்​. பின்​னர்​ நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “சுதர்சன் ரெட்டி… அரசியலமைப்பை காப்பதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்!” – ராகுல் காந்தி

    August 20, 2025
    தேசியம்

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என நேருவே ஒப்புக் கொண்டார்: பிரதமர் மோடி தகவல்

    August 20, 2025
    தேசியம்

    பிரதமர், முதல்வர்கள் பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஒரு தெளிவுப் பார்வை

    August 20, 2025
    தேசியம்

    பட்டியல் சமூகத்துக்கான 17% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

    August 20, 2025
    தேசியம்

    ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத 50,000 ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் நீக்கம்

    August 20, 2025
    தேசியம்

    மும்பையில் குறைந்தது மழையின் தீவிரம் – இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் மக்கள்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீண்ட தூர ஓட்டம் உங்கள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்; ஆய்வு என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு மறு ஆய்வுக்கு 11 பேர் குழு அமைப்பு
    • லூயிஸ் உய்ட்டன், 3 13,300 லிப்ஸ்டிக் மற்றும் அழகு பிரியர்கள் அதை இழக்கிறார்கள்
    • நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி
    • “இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.