Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

    கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் ‘தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் பேசும் ‘தி எமர்ஜென்சி டைரி’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அவசர நிலை பற்றிப் பேசும்போது, ​​அதன் மீதமுள்ள விளைவுகளை நீக்க இதுவே சரியான தருணம்.

    பிரதமர் மோடி காலனித்துவ ஆட்சியின் மரபை அழிக்க பாடுபடுவது போல, அவசர நிலையின் இரண்டு முக்கிய விளைவுகள் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை நமது அரசியலமைப்பில் சேர்த்தது. மதச்சார்பின்மை என்பது சர்வ தர்ம சம்பவத்தின் இந்தியக் கருத்துக்கு எதிரானது என்று நான் நம்புகிறேன். அதேபோல சோசலிசம் ஒருபோதும் உண்மையில் நமது பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கவில்லை. நமது பார்வை எப்போதும் சர்வோதய அந்த்யோதயாவில் இருந்தது.

    எனவே, மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து நீக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், அவை அசல் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. பின்னர் இந்திரா காந்தியால் அவசர நிலையின்போது இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன” என்று அவர் கூறினார்.

    முன்னதாக, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள், அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை.

    ‘மதச்சார்பின்மை’என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம். அவை ஆட்சி மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? அவை நீக்கப்பட வேண்டும்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    தேசியம்

    பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கல்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
    • அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!
    • கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
    • உத்தரகண்ட் பயணம், உத்தரகண்ட் சுற்றுலா, உத்தரகண்டில் பார்வையிட வேண்டிய இடங்கள், உத்தரகண்டில் செய்ய வேண்டிய விஷயங்கள், உத்தரகண்டில் உள்ள மலை நிலையங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.